tamilnadu

img

பூந்தமல்லி சட்ட மன்ற தொகுதியில் 80. 2 விழுக்காடு மறுவாக்குப்பதிவு

பூந்தமல்லி, மே 19-திருவள்ளூர் மக்களவைத் தொகுதியில் பூந்தமல்லி சட்டமன்ற தொகுதிக்குஉட்பட்ட திருநின்றவூர் அருகே உள்ள மேட்டுப்பாளையம் கிராமத்தில் ஒரு வாக்குச்சாவடியில் (எண் 195) வாக்கு எண்ணிக்கையில் குளறுபடி ஏற்பட்டது.கடந்தமாதம் 18 அன்று நடைபெற்ற வாக்குப் பதிவின் போது மொத்தம் 858 ஓட்டுகள் பதிவானதாக முடிவு செய்யப்பட்டது. ஆனால் இறுதியில் வாக்குப்பதிவு எந்திரத்தில் பதிவான ஓட்டுகளை சரிபார்த்த போது திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதிக்கு 27 வாக்குகளும், பூந்தமல்லி சட்டமன்ற தொகுதிக்கு 37 வாக்குகளும் கூடுதலாக பதிவாகி இருந்தன.இதையடுத்து மேட்டுப்பாளையம் கிராமத்தில் உள்ள வாக்குச்சாவடிஎண் 195-ல் மே-19 அன்றுமறுவாக்குப்பதிவு நடைபெற்றது. வாக்குப்பதிவு நேரம் தொடங்கியது முதலே வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர். வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் காலையிலே ஏராளமானோர் வாக்களித்தனர். ஏற்கனவே இவர்கள் வாக்களித்திருந்ததால் மறுதேர்தலின் போது இடது கை நடுவிரலில் மை வைக்கப்பட்டது.இந்த வாக்குச்சாவடியில் மொத்தம் 513 ஆண் வாக்காளர்களும், 536 பெண் வாக்காளர்களும் எனமொத்தம் 1049 பேர் உள்ளனர். 868 பேர் வாக்களித்தனர். மறுவாக்குப்பதிவை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

;