ஆவடி பகுதியில் பறிமுதல் செய்யப்பட்ட 70 கிலோ கஞ்சா தீயிட்டு அழிப்பு
ஆவடி, மே 31- ஆவடி காவல் ஆணை யரகப் பகுதியில் 84 வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 70 கிலோ எடையுள்ள கஞ்சாவை போலீஸார் வெள்ளிக் கிழமை தீயிட்டு அழித்தனர். ஆவடி காவல் ஆணையரகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதைப் பொருள்களின் நடமாட்டத்தை கண் காணித்து கடும் நடவடிக்கை எடுக்க ஆணையர் கி.சங்கர் உத்தரவிட்டார். இதன்படி தனிப்படையினர் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு, 84 கஞ்சா வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கைது சிறையில் அடைத்தனர். இவர்களிடமிருந்து 70 கிலோ எடையுள்ள கஞ்சாவை செங்கல்பட்டு மாவட்டம், தென் மேல்பாக்கம் என்ற இடத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் காவல் உதவி ஆணையர் பொன்.சங்கர் தலைமையிலான குழு வினர் எரித்து அழித்தனர். இது போல கடந்த 2 ஆண்டுகளாக 106 வழக்குகளில் கைப்பற்றப் பட்ட 721 கிலோ எடையுள்ள கஞ்சாவை எரித்து அழிக்கப்பட்டது.