சென்னை:
தமிழகத்தில் மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு தேதி ஓரிரு நாளில் அறிவிக்கப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.இதுகுறித்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியதாவது:
தமிழகத்தில் மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு தேதி ஓரிரு நாளில் அறிவிக்கப்படும்.தமிழகத்தில் இந்தாண்டு 4,061 மருத்துவ இடங்களுக்கு நவ.18 ஆம் தேதி அல்லது நவ.19 ஆம் தேதி முதல் கலந்தாய்வு நடத்தப்படும். நாள்தோறும் 500 மாணவர்களுக்கு கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது.7.5 சதவீத உள்ஒதுக்கீடு மூலம் எம்.பி.பி.எஸ்.சில் 304, பி.டி.எஸ்.சில் 91 பேருக்கு வாய்ப்பு கிடைக்கும்.திட்டமிட்டபடி நவ.16 ஆம் தேதி மருத்துவ படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.