tamilnadu

img

காக்னிசண்ட் ஐ.டி நிறுவனத்தில் 7,000 பேர் ஆட்குறைப்பு

சென்னை:
சர்வதேச அளவில் முன்னணியில் இருக்கும் மென்பொருள் நிறுவனங்களில் ஒன்று காக்னிசண்ட் டெக்னாலாஜி சொல்யூஷன்ஸ். இந்த நிறுவனத்திலிருந்து, 2020க்குள் உலகளவில் சுமார் 7,000 பேரை பணியில் இருந்து விலக்கப் படவுள்ளதாக வெளியான தகவல்சென்னையில் உள்ள ஐ.டி ஊழியர்கள் மத்தியில் அச்சத்தை ஏற் படுத்தியுள்ளது.

சமூக ஊடகங்களின் உள்ளடக்கத்தைக் கண்காணித்து அவற்றில்உள்ள இன, மத, மொழி ரீதியானவன்முறைக்கு வித்திடக்கூடிய கருத்துகளை நீக்குவது, தனிநபர்களின் அந்தரங்க உரிமைகளை மீறும் வகையிலான பதிவுகளை நீக்குவது உள்ளிட்டவற்றை மேற்கொள்ளும் ‘கண்டெண்ட் மாடரேஷன்’ துறையில் இருந்து விலக உள்ளதாகவும், அடுத்து வரும் காலாண்டுகளில் மூத்த நிலையில் உள்ள 7,000 ஊழியர்கள் படிப்படியாக பணியில் இருந்து விலக்கப் படுவார்கள் என்றும் காக்னிசண்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில் காக்னிசண்ட் நிறுவனத்தில் இருந்து அதிகாரப்பூர்வமான விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை. ஆயினும், ஊழியர்கள் மத்தியில் வேலை பறிக்கப்படுமோ, அடுத்த வேலைக்கு இப்போதே முயற்சி செய்ய வேண்மோ என்ற அச்ச உணர்வு ஏற்பட்டுள்ளது.சென்னையில் எத்தனை ஊழியர்களை பணியில் இருந்து நீக்கப்போகிறார்கள் என இதுவரை வெளிப்படையாகத் தெரிவிக்கவில்லை என காக்னிசண்ட் ஊழியர்ஒருவர் கூறியதாக செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.“ஒவ்வொரு ஊழியருக்கும் ஆண்டுக்கு ஒருமுறை மதிப்பீடு இருக்கும். அதுமட்டுமல்லாது இதுபோன்ற நெருக்கடி சமயத்தில் பணியாளர்களின் திறன்களை சோதிக் கிறோம் என அறிவிப்பார்கள். இதற்குமுந்தைய காலத்தில் நடந்தமதிப்பீடுகளை வைத்துக்கொண்டு, தற்போது குறைத்து மதிப்பெண் கொடுத்து, எங்கள் நிறுவனத்திற்கு தேவையான திறன் இல்லை எனகூறிவிடுவார்கள். யாருக்கு வேலைபறிக்கப்படும் என்ற பயத்தில் இருக்கிறோம்,’’ என்கிறார் அந்த ஊழியர்.

‘’வேலையில் இருந்து நீக்கிவிட்டால், என் குடும்ப உறுப்பினர்களிடம் எப்படி சொல்வது எனத் தெரியவில்லை. என்னுடன் வேலைசெய்யும் நண்பர்கள் பலரும் இதே சூழலில்தான் இருக்கிறார்கள். ஆனால், எனக்கு வேலை போகக் கூடாது என்ற சுயநலமான எண் ணம் வந்துவிட்டது,’’ என வருத் தத்துடன் பேசுகிறார் அந்த ஊழியர்.2017ல் ஏற்பட்டது போல பெரியஅளவில் ஆட்குறைப்பு நடைபெறும் என்ற பதற்றம் காக்னிசண்ட் ஊழியர்களைத் தொற்றியுள்ளது என்று மற்றொரு ஊழியர் கூறினார். “வேலையில் இருந்துநீக்கப்படுபவர்கள் குறைந்தபட்சம் ஆண்டுக்கு ரூ.10 முதல் 18 லட்சம்வரை சம்பளம் வாங்குபவர்களாகஇருப்பார்கள் என்பதால், அவர்களுக்கு மற்ற நிறுவங்களில் எளிதாக வேலை கிடைக்காது. பணியில் இருந்து நீக்கப்படுபவர்களில் ஒரு சிலர் மட்டுமே, புதிய பயிற்சிகள் மற்றும் மதிப்பீட்டில் தேறிமீண்டும் வேலைக்கு எடுத்துக் கொள்ளப்படுவார்கள். 10,000 பேரில் வெறும் 2,000 பேர்தான் தேறுவார்கள்’’ என்றும் அவர் கூறினார்.ஊழியர்களை வேலையில் இருந்து நீக்க குறைந்தபட்சம் மூன்று மாதம் அவகாசம் கொடுக்கவேண்டும் உள்ளிட்ட பல விதிகளை மென்பொருள் நிறுவனங்கள்பின்பற்றுவதில்லை என ஐடி ஊழியர்களுக்கான அமைப்பை நடத்தி வரும் பரிமளா கூறுகிறார்.“ஒரு நிறுவனம் ஆட்குறைப் பில் ஈடுபடுவதற்கு முன்னர், தொழிலாளர் நலத்துறையிடம் தெரிவிக்க வேண்டும். ஆனால் மூத்தபணியாளர்களை நீக்கப்போகிறோம் என தற்போது காக்னிசண்ட்தெரிவித்துள்ளது. மூத்த பணியாளர்கள் என்றால், குறைந்தபட்சம் பத்து ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி, சுமார் 40 வயதை தொடும் நபராக இருப்பார்கள்,’’ என்று அவர் கூறுகிறார்.“ஒரு சில நிறுவனங்கள் பணியாளர்களை நீக்குவதற்கு பதிலாக, அவர்களாகவே வெளியேற விரும்புவதாக கடிதம் கொடுக்கச் சொல்வார்கள். அடுத்தகட்டமாக மதிப்பீடு செய்கிறோம் எனக் கூறி வெளியேற்ற முயற்சிப்பார்கள். ஊழியர்கள் தொழிலாளர் நலத் துறை அல்லது நீதிமன்றம் சென்றால் வழக்கு முடிய குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் ஆகும்.அதுவரை வேலைக்கு செல்லாமல் இருக்கமுடியாது என்பதால் துணிச்சலுடன், பல நிறுவனங்கள் ஊழியர்களை மிரட்டுவார்கள்,’’ என்றும் அவர் கூறுகிறார்.

;