tamilnadu

img

தமிழகத்தில் ஒரே நாளில் 61 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை...

சென்னை 
தமிழகத்தில் கொரோனா பரவல் வேகம் மின்னல் வேகத்தில் இருப்பதால் கொரோனா அறிகுறி உள்ள மாதிரிகள் வருகை நாள்தோறும் அதிகரித்து வருகிறது. அதாவது கடந்த ஒரு வார காலமாக தினமும் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு பரிசோதனை செய்யப்படுகிறது. இதில் 10% பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்படுகிறது. 

இந்நிலையில் தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா அறிகுறியுடன் 63,250 பேருடைய மாதிரிகள் மருத்துவமனைக்கு வந்துள்ளன. இதன்மூலம் அறிகுறியுடன் வந்த மொத்த மாதிரிகளின் எண்ணிக்கை 24,14,713 ஆக உயர்ந்துள்ளது. 
இதில் 61,342 பேரின் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.  பரிசோதனை முடிவில் 6,993 பேருக்கு தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் இதுவரை 23,24,080 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. 
மேலும் தமிழகத்தில் உள்ள கொரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கை 117 ஆகவும் உயர்ந்துள்ளது.  

;