tamilnadu

img

60 ஆயிரம் காலிப்பணியிடங்களை நிரப்புக தமிழகம் முழுவதும் மின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

60 ஆயிரம் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், கேங்மேன் உள்ளிட்ட பணியாளர்களுக்கு 6 விழுக்காடு ஊதிய உயர்வு, ஊர் மாற்றல் உத்தரவு, விடுப்பு உள்ளிட்ட சலுகைகளை வழங்க வேண்டும். வாரியத்தால் தேர்வு செய்யப்பட்டு நிலுவையில் உள்ள 5 ஆயிரம் பேருக்கு கேங்மேன் பணியாணை வழங்க வேண்டும்,  கேங்மேன்களை கள உதவியாளர்களாக  பணிமாற்றம் செய்ய வேண்டும். வாரிய ஆணை எண் 2ஐ ரத்து செய்ய வேண்டும்,  ஒப்பந்த ஊழியர்கள், பகுதிநேர ஊழியர்களை அடையாளம் கண்டு பணி நிரந்தரம் செய்ய வேண்டும், பிரிவு 1 மற்றும் 2 அதிகாரிகளுக்கு 4 ஆண்டுக்கு ஒருமுறை வழங்க வேண்டிய ஊதிய உயர்வை 10 ஆண்டுகள் என மாற்றியதை கைவிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி  வியாழனன்று (ஜூன் 22) தமிழகம் முழுவதும் மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 

 

வடசென்னை வளர்ச்சிக்கு 1000 கோடி, வடசென்னையின் தேவைகளை பூர்த்தி செய்யுமா? என்ற முழக்கத்தை முன்வைத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் அம்பத்தூர் காமராஜபுரத்தில்  நடைபெற்ற  மக்கள் சந்திப்பு இயக்கத்தில் மாவட்டக் குழு உறுப்பினர் சு.லெனின் சுந்தர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.