tamilnadu

img

தமிழகத்தில் புதிதாக 5,994 பேருக்கு கொரோனா தொற்று...  பலி எண்ணிக்கை 5 ஆயிரத்தை நெருங்கியது.... 

சென்னை 
தமிழகத்தில் கொரோனா என்னும் கொடிய வைரஸின் ஆட்டம் நாளுக்குநாள் அதிகரித்து. தினமும் பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கை மின்னல் வேகத்தில் அதிகரித்து வருவதால் மக்கள் ஒருவித கலக்கத்துடன் உள்ளனர். 

இந்நிலையில், மாநிலத்தில் புதிதாக 5,994 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு 2,96,901 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கடந்த 24 மணிநேரத்தில் 119 பேர் பலியாகிய நிலையில், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 4,927 ஆக அதிகரித்துள்ளது.

6,020 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நிலையில், குணமடைந்த நபர்களின் மொத்த எண்ணிக்கை 2,38,638 ஆக உயர்ந்துள்ளது. இன்னும் 53,336 பேர் சிகிச்சையில் உள்ளனர்.  இன்றைய கொரோனா பாதிப்பில் 20 பேர் மாநிலத்தின் வெளிப்பகுதியில் இருந்து வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.   

;