tamilnadu

img

தமிழகத்தில் புதிதாக 5,986 பேருக்கு கொரோனா தொற்று...  குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்தை தாண்டியது...

சென்னை 
தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் தனது பரவல் வேகத்தை விரிவுபடுத்தி பல்வேறு சேதாரத்தை ஏற்படுத்தி வருகிறது கொரோனா என்னும் ஆட்கொல்லி வைரஸ். தினசரி பாதிப்பும், பலி எண்ணிக்கையும் உச்சத்தில் இருப்பதால் மக்கள் ஒருவித கலக்கத்துடன் காலத்தையே நகர்த்தி வருகின்றனர். 

இந்நிலையில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 5,986 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு 3,61,435 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இன்று ஒரே நாளில் (ஆக., 20) 116 பேர் பலியாகியுள்ள நிலையில், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 6,239 ஆக அதிகரித்துள்ளது. 5,742 பேர் கொரோனாவை வென்று இயல்பு நிலைக்கு திரும்பிய நிலையில், தமிழகத்தில் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3 லட்சத்தை (3,01,913) தாண்டியது. இன்னும் 53,283 பேர் சிகிச்சையில் உள்ளனர்.   

சென்னையில் இன்று 1,177 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. மொத்த பாதிப்பு  - 1,21,450 

;