கொத்தடிமைகளாகவும், அத்துக்கூலிகளாகவும் தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில், ஏராளமான பழங்குடியின மக்கள் பரிதவித்து வருகின்றனர். அதன் தொடர்ச்சி யாக திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே பழங்குடியின இருளர் குடும்பம் ஒன்று, வாழ வழியின்றி, நிர்கதியாய் நிற்கும் பரிதாபம் ஏற்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த சென்னவரம் ஊராட்சியில் உள்ள லட்சுமி ரைஸ் மில்லில், கடந்த 53 ஆண்டுகளுக்கு முன்பு, 12 வயது சிறுவனாக வேலைக்கு சேர்ந்தார் ரங்கசாமி மகன் ஏழுமலை. நெல், மணி லாவை களத்தில் கொட்டி சுத்தப்ப டுத்துவது, காயவைப்பது, அறைப் பது, வாட்ச்மேன் என ரைஸ்மில்லில் உள்ள வேலைகளை செய்வதே சிறுவன் ஏழுமலையின் தினசரி பணியாக இருந்தது. ஏழுமலைக்கு சம்பளம், கூலி என்ற கணக்கு ஏதும் இல்லை. எப்போதாவது பணம் கேட்டால், அப்போதய மில் முதலாளி, கோவிந்தராஜி செட்டியார், ரூ. 50, 100 என்று கொடுப்பார், தீபாவளி, பொங்கல் என பண்டிகை என்றால், 500, 1000 கிடைக்கும் அவ்வளவு தான். மற்றபடி 3 வேலை சாப்பாடு, இரவில் படுத்து தூங்க மில்லில் உள்ள ஒரு ஷெட்டில் இடம்.
கால ஓட்டத்தில், மில் முதலாளி கோவிந்தசாமி செட்டியார் மறை வுக்கு பின்னர், அவரின் வாரிசான முரளி ஓனராக மாறினார். சிறுவனாக இருந்த தொழிலாளி ஏழுமலை, வாலிப வயதானபோது, திருமணத் திற்கு பெண் பார்க்க சென்றபோது, ரைஸ்மில்லில் வசிப்பவனுக்கு எப்படி பெண் கொடுக்கமுடியும் என்று பெண் வீட்டார் கேட்டபோது, ஏழுமலை குடியிருக்க நான் இடம் வாங்கி தருகிறேன், தைரியமாக பெண் கொடுங்கள் என்று முத லாளி முரளி, ஊர் தலைவர் முன்னி லையில் கூறியுள்ளார். அதன்படி, சாந்தி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டு வந்த ஏழுமலை, மனைவி யுடன் ரைஸ்மில் ஷெட்டிலேயே குடும்பம் நடத்தியுள்ளார், இவர்க ளுக்கு ராஜேஸ்வரி, தேவகி என்ற மகள்களும், முரளி என்ற ஒரு மகன் உள்ளனர். குடும்பத்திற்கு முகவரி குறிப்பிடாமல், சென்னவரம் என குடும்ப அட்டை வழங்கப்பட் டுள்ளது. ஏழுமலையின் மகள்க ளும், மகனும் திருமணமாகும் வரைக்கும் அந்த ரைஸ்மில்லில் வேலை செய்துள்ளனர்.
தற்போது, மில் முதலாளி முரளி, ரைஸ்மில்லை வேறு நபருக்கு விற்றுள்ளார். வாங்கிய நபர், ஏழு மலையின் குடும்பம் வசிக்கும் இடத்தை காலி செய்து விட்டு வெளியே போகும்படி மிரட்டி யுள்ளார். இந்த, ரைஸ்மில்லே எனது உலகம், இதைத்தவிர வேறு எது வும் எனக்கு தெரியாது. திடீரென வெளியே போகச்சொன்னால், நான் எப்படி வாழ்வது என்று தவித்து வந்த ஏழுமலை, திரு வண்ணாமலை மாவட்ட ஆட்சியரி டம் கோரிக்கை மனு ஒன்றை அளித்துள்ளார். அதில், எழுத படிக்கத்தெரியாத, வெளி உலகம் தெரியாத பழங்குடியினரான தன் குடும்பம் வாழ வகை செய்ய வேண்டும் என்று கோரிக்கை தெரி வித்துள்ளார்.