சென்னை,செப்.28- சென்னை கிண்டி நிறுவன வளாகத்தில் உள்ள தேசிய முதி யோர் நல மருத்துவ மையத் தில் ஒப்பந்த அடிப்படையில் பணி நியமன ஆணைகளை வழங்கும் நிகழ்ச்சி சனிக்கிழ மையன்று (செப்.28) நடை பெற்றது. தேசிய முதியோர் நல மருத்துவ மையத்தில் ஒப் பந்த அடிப்படையில் ஆய்வக உதவியாளர், டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் உள்ளிட்ட பணிகள் 43 பேருக்கு ஒதுக்கப்பட்டுள் ளது.
அதில் சனிக்கிழமையன்று நடைபெற்ற நிகழ்வில் 28 பேரு க்கு பணி நியமன ஆணைகளை மருத்துவம் - மக்கள் நல் வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் வழங்கினார்.
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறுகையில், “சென்னை, கோவை என அனைத்து மருத் துவமனைகளிலும் கட்டண படுக்கை அறைகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் இந்த மருத்துவ மனையிலும் 20 கட்டண படுக்கை அறை உள்ளது. மிகவும் குறைந்த அளவு நாள் ஒன்றுக்கு 900 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டணத்திற்குள் உணவு வசதியும் கொடுக்கப்படுகிறது. மன அழுத்தத்தை போக்கும் வகையில் பல்லாங்குழி, செஸ், கேரம் போர்டு போன்ற விளையாட்டு சாதனங்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனை முதியோ ருக்கான பல்வேறு பிரத்யேக சேவைகள் கொண்டுள்ளது. 60 பணியிடங்கள் ரெகுலர், 276 பணியிடங்கள் ஒப்பந்த அடிப்ப டையில் பணியாளர்களை நிய மிக்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதற்கான பணிகள் நடைபெற்று வரு கின்றது என்றார்.
பாராசிட்டமால் உள்ளிட்ட 53 வகையான மருந்துகள் தரமா னவை இல்லை என தேசிய மருந்து தரக்கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது குறித்த கேள்விக்கு, “ஒவ் வொரு தொகுப்புதான் மருந்து கள் தயாரித்து அனுப்புவார்கள். அதில் ஒரு பேட்ச் 10 கோடி என்றால் மற்றொரு பேட்ச்சில் 10 கோடி என்பார்கள். அவ்வாறு தயாரிக்கப்பட்ட ஒரு தொ குப்பில் உள்ள பாராசிட்டமால் உள்ளிட்ட 53 வகையான மருந்துகள் தரமானவை இல்லை என தேசிய மருந்து தரக்கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது. இந்த பேட்ச் மருந்துகள் தடை என்று மட்டும் தான் தெரிவித்துள்ளார்கள். ஒட்டுமொத்தமாக அல்ல. நாம் ஆர்டர் கொடுத்துள்ள மருந்துக ளில் அவர்கள் சொல்லி இருக்கும் இந்த 53 வகையான மருந்துகள் இல்லை என்று அமைச்சர் விளக்கமளித்தார்.