சென்னை,ஜன.2- பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 10 நாட்களே இருப்பதால் அரசு விரைவு பேருந்துகளில் முன்பதிவு விறுவிறுப் பாக நடந்து வருகிறது.
வழக்கமாக செல்லும் ரயில், சிறப்பு ரயில் அனைத்தும் நிரம்பி விட்ட நிலையில் ஆம்னி பேருந்துகளில் பெரும்பாலான இடங்கள் நிரம்பி விட்டன. குறிப்பாக 12, 13, 14 ஆகிய தேதி களில் பயணம் செய்வதற்கு பேருந்து, ரயில்களில் இடமில்லை. பொங்கல் பண்டிகை சனி, ஞாயிறு (ஜன. 13, 14 தேதி) விடுமுறை நாட்களில் சேர்ந்து 15 ஆம் தேதியும், அதனை தொடர்ந்து மாட்டு பொங்கல், உழவர் தினம், 16, 17 ஆம் தேதி அரசு விடுமுறை என்பதால் தொடர்ச்சியாக 5 நாட்கள் விடுமுறை கிடைக்கிறது.
இதனால் வெளியூர் பய ணம் இந்த ஆண்டு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை மற்றும் பிற நகரங்களில் இருந்து 3 நாட்களுக்கு அரசு விரைவு பேருந்துகளில் பயணம் செய்ய 50 ஆயிரம் பேருக்கு மேல் முன்பதிவு செய்துள்ளனர். தென்மாவட்ட பகுதிகளுக்கு செல்லக் கூடிய பேருந்து களில் அனைத்து இடங்களும் நிரம்பி விட்டதால் முன்பதிவுக்கு பிற போக்கு வரத்து கழக பேருந்துகள் இணைத்து உள்ளனர். மதுரை, திருநெல்வேலி, சேலம், கோவை, கும்பகோணம் போக்கு வரத்துக் கழகங்களை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட பேருந்துகள் தற்போது முன் பதிவு நடந்து வருகிறது.
சென்னையில் இருந்து வெளியூர் செல்ல 35 ஆயிரம் பேருக்கு மேல் பதிவு செய்துள்ளனர். விரைவில் சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் வெளியிட இருந்தால் அதற்கான முன்பதிவு தொடங்கும். இந்த ஆண்டு அரசு விரைவு பேருந்துகளில் பயணம் செய்பவர்கள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத் திற்கு செல்ல வேண்டும். இதற்கான தகவல் முன்பதிவு செய்த பயணி களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.