சென்னை, ஆக.7 ஐந்தாண்டு சிறு தானிய திட்டத்தை தமிழக அரசு 20 மாவட்டங்களுக்கு விரிவுபடுத்த உள்ளதாக மாநில உணவுத்துறை அமைச்சர் ஆர்.சக்கரபாணி தெரிவித்துள்ளார். சென்னை தரமணியில் உள்ள எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளை (எம்.எஸ்.எஸ்.ஆர்.எஃப்) நடத்திய ‘உணவு, ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கி யத்திற்கான வலிமைமிக்க சிறு தானியங்கள்’ என்ற தலைப்பில் மூன்று நாள் சர்வதேச மாநாட்டின் தொடக்க விழாவில் அவர் பேசினார். “பொது விநியோக முறை மூலம் மானிய விலை யில் சிறு தானியங்கள் விநியோகிக்கப்படும் என்றும் மேலும் தரிசு நிலத்தை சிறு தானிய சாகுபடியின் கீழ் கொண்டு வர ஊக்கத்தொகை வழங்கப்படும்,” என்றும் அவர் கூறினார், இந்த நடவடிக்கை “விவசாய நிலங்களில் பயிர் பன்முகத்தன்மையை” உறுதி செய்யும். தினசரி உணவில் அனைத்து வகையான சிறு தானியங்களை சேர்ப்பதன் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தினார். “ சிறு தானியங்கள் நமக்கு நல்ல ஊட்டச்சத்து நன்மைகளை வழங்குகிறது, மேலும் கால்சியம், பாஸ்பரஸ், நார்ச்சத்து மற்றும் புரதம் - இவை அனைத்தும் நம் ஆரோக்கியத்திற்கு அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டார்” சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளை தனது 34வது ஆண்டு விழாவைக் கொண்டாடுகிறது. இதை யொட்டி ஆண்டறிக்கையை அமைச்சர் வெளியிட்டார். சிறு தானிய கண்காட்சியையும் அவர் தொடங்கி வைத்தார். பழங்குடியின விவசாயிகளுடனும் கலந்துரையாடினார். அறக்கட்டளையின் தலைவர் டாக்டர். சௌமியா சுவாமிநாதன், ஐநா உணவு மற்றும் வேளாண் அமைப்பின் ஆசியா மற்றும் பசிபிக் பிராந்திய பிரதிநிதி கொண்டா ரெட்டி. கொலம்பியா பல்கலைக்கழக பேராசிரியர் டாக்டர் ரூத் டிஃப்ரைஸ் உள்ளிட்டோர் இதில் கலந்துகொண்டனர்.