தோழர் சி.கருப்பையனின் 4வது நினைவு தினம்
சென்னை விமான நிலைய விரிவாக்க எதிர்ப்பு போராட்டத்தில் குடும்பத்தோடு பங்கெடுத்து, தனது உடைமைகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு வழங்கிய தோழர் சி.கருப்பையனின் 4வது நினைவு தினம் வியாழனன்று ((ஜூன்5) அணுசரிக்கப்பட்டது. பொழிச்சலூரில் உள்ள நினைவகத்தில் அவரது உருவப்படத்திற்கு கட்சியின் தென்சென்னை மாவட்ட செயலாளர் ஆர்.வேல்முருகன் அஞ்சலி செலுத்தி உரையாற்றினார். பல்லாவரம் பகுதிச் செயலாளர் எம்.தாமோதரன், மாவட்டக்குழு உறுப்பினர் எம்.சி.பிரபாகரன் உள்ளிட்டோர் உடன் உள்ளனர்.
பொதுக் கழிவறைகளை அசுத்தம் செய்வதை தடுக்க மாநகராட்சி நடவடிக்கை
சென்னை, ஜூன் 5- மக்கள் அதிகம் கூடும் பொது இடங்களில் இலவச கழிவறைகள் கட்ட மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. சென்னை மாநகராட்சியுடன் வாஷ் லேப், சியர் மற்றும் ரீசைக்கிள் பின் அமைப்பு கள் இணைந்து சர்வதேச கழிப்பறை திரு விழா 3.0 ரிப்பன் கட்டிட வளாகத்தில் உள்ள அம்மா மாளிகை கூட்டரங்கில் புதனன்று நடத்தியது. விழாவுக்கு, மேயர் பிரியா தலைமை வகித்து, சர்வ தேச கழிப்பறை திருவிழா 3.0க்கான இலச்சி னையை வெளியிட்டார். இதைத்தொடர்ந்து, சென்னை மாநகராட்சி பகுதிகளில் திறந்த வெளியினை சிறுநீர் மற்றும் மலம் கழித்தல் என கழிப்பிடமாகப் பயன் படுத்தும் இடங்களைக் கண்டறிந்து வரை படமாக்குதல், விழிப்புணர்வுப் பிரச்சாரம், கழிவறைகளைத் தத்தெடுத்தல் மற்றும் அமைத்துத் தருதல், கழிவறைகளைப் பரா மரிக்க பொதுமக்கள், நிறுவனங்கள், சமூக அமைப்புகளை ஊக்குவிக்கும் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளைத் தொடங்கி வைத்தார். ஒரு மாதம் முழுவதும் நடைபெறும் இந்த சர்வதேச கழிவறை திருவிழா 3.0வில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு முக்கியமான நிகழ்வுகள் மூலம் கழிவறை பற்றிய உரையாடல்கள் சென்னை மாநகரம் முழுவதும் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பூட்டிய வீட்டுக்குள் வாலிபர் வெட்டிக்கொலை சென்னை, ஜூன் 5- திருவொற்றியூர் ரயில்வே ஸ்டேஷன் சாலையில் வசிப்பவர் குமார். இவருக்கு மனைவி ஜெயா, மகன்கள் நரேஷ், ஆகாஷ் (19) ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர். நரேஷ், ஆகாஷ் இருவரும் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்பு உடையவர்கள். நரேஷ் தற்போது சிறையில் உள்ளார். ஆகாஷ் மீது கொலை முயற்சி வழிப்பறி உட்பட 17 வழக்குகள் உள்ளன கடந்த மாதம் 22ஆம் தேதி அவர் சிறையில் இருந்து வீடு திரும்பியுள்ளார். இதையடுத்து கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருவொற்றியூர் ரயில்வே ஸ்டேஷன் சாலையில் உள்ள ஒரு குடியிருப்பிற்கு மாறியுள்ளனர். ஆகாசுக்கு உயிருக்கு ஆபத்து இருக்கும் என்பதால் அவரை வீட்டை விட்டு வெளியே அனுப்பாமல் வீட்டிலேயே வைத்து பாதுகாத்து வந்தனர். வெளியே செல்லும்போது கூட வீட்டை பூட்டி விட்டு செல்வது வழக்கம். அதேபோல் புதன்கிழமை ஜெயா வெளியே செல்லும் போது வீட்டை பூட்டிவிட்டு சாவியை வெளியே யாருக்கும் தெரியாமல் ஒரு இடத்தில் மறைத்து வைத்து சென்றுள்ளார். பின்னர் இரவு 9.30 மணியளவில் ஜெயா வீட்டிற்கு வந்த போது, வீடு திறந்து கிடந்துள்ளது. உள்ளே சென்று பார்த்த போது ஆகாஷ் வெட்டுக்காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் காவல் நிலை யத்திற்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் காவல்துறையினர் வந்து ரவுடி ஆகாசின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, 5 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். கன்டெய்னர் மீது கார் மோதி விபத்து திருவள்ளூர், ஜூன் 5 சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் நின்றிருந்த கண்டெய்னர் லாரி மீது கார் மோதியதில் அப்பளம்போல் நொறுங்கியது. கார் ஓட்டுநர் பலத்த காயம் அடைந்தார். சென்னை -கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் புதனன்று மாலை சோழவரம் அடுத்த அத்திப்பேடு பகுதியில் உள்ள மேம்பாலத்தில் கண்டெய்னர் லாரி ஒன்று டயர் வெடித்து நின்றிருந்தது. அப்போது, ஆந்திராவில் இருந்து புதுச்சேரி நோக்கி மின்னல் வேகத்தில் சென்ற கார் எதிர்பாராதவிதமாக அந்த கன்டெய்னர் மீது மோதியது. இதில் காரின் மேல் பக்கம் சேதமடைந்து, காரை ஓட்டி சென்ற புதுச்சேரியை சேர்ந்த சக்தி பாலகுரு (34) படுகாயமடைந்தார். தகவல் அறிந்து வந்த செங்குன்றம் போக்குவரத்து புலனாய் பிரிவு போலீசார் ஓட்டுநரை மீட்டு சிகிச்சைக்காக சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து காரணமாக சென்னை செல்லும் மார்க்கத்தில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உடனடியாக கிரேன் வரவழைக்கப்பட்டு, விபத்தில் சிக்கிய கார் அப்புறப்படுத்தப்பட்டு, போக்குவரத்து சீர் செய்யப்பட்டது. மேலும் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அரசு பள்ளியில் மாணவர்கள்: விழிப்புணர்வு பேரணி ராணிப்பேட்டை, ஜூன் 5 – அரசு பள்ளியில் மாணவர்கள் சேர்ப்பதற்கான விழிப்புணர்வு பேரணி புதனன்று (ஜூன் 4) தலைமை ஆசிரியர் செ. சரவணன் தலைமையில் ஒழுகூர் பகுதியில் நடைபெற்றது. சோளிங்கர் ஒன்றியம், ஒழுகூர் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளியில் 2025 - 26 ஆம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை வலியுறுத்தி பள்ளி மாணவர்கள் சார்பில் நடைபெற்ற பேரணியில் உதவி ஆசிரியர்கள் வி.எஸ்.ஆர். இன்பவள்ளி, கே. பானுமதி, இ. வளர்மதி உள்ளிட்டோர் பேரணியில் கலந்து கொண்டனர். தங்கம் விலை உயர்வு சென்னை, ஜூன் 5 சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு சவரன் ரூ.72ஆயிரத்து 720-க்கு விற்பனையானது. சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 40 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.9 ஆயிரத்து 130-க்கும் சவரனுக்கு 320 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.73 ஆயிரத்து 40-க்கு விற்பனையானது. வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி 114 ரூபாய்க்கும் ஒரு கிலோ பார் வெள்ளி ஒரு லட்சத்து 14 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.