tamilnadu

img

அமைச்சர் எ.வ.வேலுவுக்கு தொடர்புடைய இடங்களில் 4-வது நாளாக சோதனை

சென்னை,நவ.6- தமிழ்நாடு பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலை, சிறு துறை முகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு வீடு மற்றும் அலுவல கங்களில் திங்களன்று (நவ.6) தொடர்ந்து 4-வது நாளாக வருமான வரி சோதனை நடந்தது.

சென்னை, திருவண்ணாமலை யில் உள்ள அவரது வீடு, கல்லூரி களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை கிண்டியில் நெடுஞ்சாலை துறைக்கு சொந்த மான சிறப்பு விருந்தினர் மாளிகை யில் கடந்த 3 நாட்களாக அதிகாரி கள் சோதனை நடத்தினர்.

இது தவிர காசாகிராண்ட், அப்பாசாமி ரியல் எஸ்டேட் நிறுவனங்களுக்கு சொந்தமான இடங்களில் திங்களன்று (நவ.6) சோதனை நடந்தது. மேலும் கோவை யில் உள்ள அமைச்சரின் நெருக்க மான பிரமுகர் வீட்டில் சோதனை நடந்துள்ளது.

எ.வ.வேலுவுக்கு சொந்தமான இடங்களில் கடந்த வெள்ளிக்கிழமை 3 ஆம் தேதி முதல் இந்த சோதனை  நடத்தப்பட்டு வருகிறது. எனினும்  இதுவரை நடைபெற்ற சோதனை யில் கைப்பற்றப்பட்ட முக்கிய ஆவணங்கள் குறித்து எந்த தகவலை யும் வருமான வரித்துறை வெளியிட வில்லை.

பொதுப்பணி ஒப்பந்ததாரர் வீடுகள் அலுவலகங்கள், பிரபல கட்டு மான நிறுவனங்கள், ரியல் எஸ்டேட்,  காசா கிராண்ட் ஆகியவற்றிலும், கரூரில் உள்ள திமுகவின் முன்னாள் எம்.எல்.ஏ.வான வாசுகி  முருகேசன் சகோதரி பத்மா  வீடுகளில் வருமான வரித்துறையி னர் சோதனை மேற்கொண்டனர்.

கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாகவும் எ.வ.வேலு வீட்டில் வருமான வரி சோதனை நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. திமுக கலை இலக்கிய பிரிவு துணைத் செயலாளர் மீனா ஜெயக்குமார் அவரது மகன் ஸ்ரீராம், சிங்காநல்லூரில் உள்ள திமுக பிரமுகர் எஸ்.எம்.சாமி வீட்டில் சோதனை நடந்தது. சோதனை முடிவுக்கு பிறகு எஸ்.எம்.சாமியை அதிகாரிகள் விசாரணைக்கு அழைத்து சென்றனர். இதுதவிர சிங்காநல்லூர் அடுத்த கள்ளிமடையில் உள்ள காசா கிராண்ட் முன்னாள் இயக்கு நர் செந்தில்குமார் வீடு, சவுரி பாளை யத்தில் உள்ள காசா கிராண்ட் அலுவலகத்திலும் வருமான வரித் துறை சோதனை நடந்தது. 4-வது நாளாக மீனா ஜெயக்குமார் வீட்டிலும்  அவரது மகன் வீட்டிலும் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டன