சென்னை, செப்.21- பராமரிப்பு பணி காரணமாக சென்னை கடற்கரை - தாம்பரம் இடைய ஞாயிறன்று (செப்.22) 44 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது என தெற்கு ரயில்வே தெரி வித்துள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு வருமாறு:- சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரத்துக்கு காலை மணி 10.30, 10.40, 10.50, 11.10, 11.20, 11.30, 11.40, மதியம் 12.00, 12.10, 12.20, 12.40, 1.15, 1.30, 2.00, 2.30 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில் சேவை ரத்து செய்யப்படு கின்றன. அதபோல், தாம்பரத்தில் இருந்து சென்னை கடற்கரைக்கு காலை 10.45, 10.55, 11.15, 11.25, 11.35 மதியம் 12.00, 12.15, 12.25, 12.45, 1.30, 1.45, 2.15, 2.30 மாலை 3.00, 3.10 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில்களும் ரத்து செய்யப்படும். சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டுக்கு காலை 11.00, 11.50, மதியம் 12.30, 1.00, 1.45, 2.15, 2.45 மணிக்கும், அரக்கோணத்துக்கு12.50 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில்களும் ரத்து செய்யப்படுகின்றன. செங்கல்பட்டில் இருந்து சென்னை கடற்கரைக்கு காலை 10.55, 11.30, மதியம் 12.20, 1.00, 1.50, திருமால்பூரில் இருந்து சென்னை கடற்கரைக்கு காலை 10.40, காஞ்சி புரத்தில் இருந்து சென்னை கடற்கரைக்கு இரவு 7.15 மணிக்கு செல்லும் மின்சார ரயில் சேவைகள் ரத்து செய்யப்படும். பராமரிப்பு பணிக்காக 44 மின்சார ரயில் சேவை நிறுத்தப்படுவதால் பயணிகளின் வசதிக்காக சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். இதன்படி, செங்கல்பட்டில் இருந்தும் சென்னை கடற்கரையில் இருந்தும் நாளை காலை 10.55,11.30, மதியம் 12.20, 1.00, 1.50 மணிக்கும் காஞ்சிபுரத்தில் இருந்து காலை 9.15, திருமால்பூரில் இருந்து 10.45 மணிக்கும் சென்னை கடற்கரைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படு கின்றன.இதுதவிர சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டுக்கு 6 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. தாம்பரம், அரக்கோணத்துக்கு தலா ஒரு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.