tamilnadu

சென்னையில் சூதாடிய 40 பேர் கைது

சென்னை, மே 7- சென்னை ஆயிரம்விளக்கு சுந்தரம் அவென்யூவில் உள்ள ஒரு தனியார் கிளப்பில் சிலர் அனுமதியின்றி சூதாட்டத்தில் ஈடுபடுவதாக காவல் துறையினருக்கு திங்கள்கிழமை ரகசியத் தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் காவல் துறையினர் சம்பவ இடத்துக்குச் சென்று திடீர் சோதனை செய்தனர்.அப்போது அங்கு பணம் வைத்து சூதாடியவர்கள், அந்த கிளப்பின் மேலாளர் வெ.சிவபிரசாத் (62), ஊழியர் ஐ.செல்வம் (32) என மொத்தம் 40 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ.2.44 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.இது தொடர்பாக காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து, அந்த கிளப்பின் உரிமையாளரை தேடி வருகின்றனர்.

;