tamilnadu

கரூருக்கு மட்டும் 4 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள்!

சென்னை, மார்ச் 31-  தமிழ்நாட்டில் 39 தொகுதிகளில் போட்டியிட உள்ள இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியா னதைத் தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்  திரத்தில் வேட்பாளர்கள் பெயர், புகைப்படம் மற் றும் சின்னம் பொருத்தும் பணி நடைபெறுகிறது.

அதன்படி, ஒரு மின்னணு வாக்குப்பதிவு எந்தி ரத்தில் 15 வேட்பாளர்கள் பெயர் மட்டும் இடம் பெறும். அதற்கு மேல் வேட்பாளர்கள் இருந்தால் கூடுதல் இயந்திரங்கள் பயன்படுத்தப்படும்.

அந்த வகையில் தமிழ்நாட்டில் 30 தொகுதி களில் 15-க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் போட்டி யிடுவதால், இந்த தொகுதிகளில் ஒன்றுக்கும் மேற்  பட்ட மின்னணு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன.

திருவள்ளூர், காஞ்சிபுரம், திருப்பூர், பொள் ளாச்சி, திண்டுக்கல், சிதம்பரம், நாகை, தஞ்சை, தென்காசி ஆகிய 9 தொகுதிகளில் மட்டும் போட்டி யிடும் வேட்பாளர்கள் எண்ணிக்கை 15 மற்றும்  அதற்கு கீழ் உள்ளது. எனவே இந்த 9 தொகுதி களில் மட்டும் ஒரு மின்னணு வாக்குப்பதிவு எந்தி ரம் மட்டும் பயன்படுத்தப்பட உள்ளது.

அதிகபட்சமாக கரூர் நாடாளுமன்ற தொகுதி யில் உள்ள வாக்குச் சாவடிகளின் 4 வாக்குப்பதிவு  இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன.

இடைத்தேர்தல் நடைபெறும் விளவங்கோடு சட்டமன்ற தொகுதியில் 22 பேர் மனு தாக்கல்  செய்திருந்தனர். 8 பேர் மனுக்கள் நிராகரிக்கப் பட்ட நிலையில், 4 பேர் தங்களது மனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டார். ஆனால் இந்த  தொகுதியில் 10 பேர் மட்டுமே போட்டியிடுகின்ற னர்.