tamilnadu

4 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு சென்னை வானிலை ஆய்வு மையம்

சென்னை,ஆக.29-

      தமிழ்நாட்டில் நான்கு நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு இருப்ப தாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    தமிழ்நாட்டில் வளிமண்டல மேல் அடுக்கு சுழற்சி காரணமாக கடந்த சில  நாட்களாக பரவலாக விட்டு விட்டு மழை  பெய்து வருகிறது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் செவ்வாயன்று 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல், 4 நாட்களுக்கு கனமழை  பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

    கோவை மாவட்டத்தின் மலைப் பகுதிகள், நீலகிரி, கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடு துறை, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், திருச்சி , திண்டுக்கல், மதுரை, தேனி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய  வாய்ப்புள்ளது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித் துள்ளது.