சென்னை, மே 8- தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் 19 அன்று மக்களவைத் தேர்தல் நடை பெற்றது. அதற்கு முன்னர் வாக்கா ளர்களுக்குப் பரிசுப் பொருள்கள், பண விநியோகம் நடைபெறு கிறதா? எனத் தீவிர சோதனையில் பறக்கும் படை அதிகாரிகள் ஈடு பட்டிருந்தனர்.
குறிப்பாக, கடந்த ஏப்ரல் 7 அன்று சென்னையிலிருந்து நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் பய ணித்த பயணிகளிடம் காவல்துறை யினர் சோதனை நடத்தினர். அதில் 3 பேரிடம் ரூ. 4 கோடி ரொக்கப் பண மும், அவர்கள் மூவரும் பாஜக உறுப்பினர் என்பதற்கான அட்டை யும் சிக்கின. தொடர்ந்து நடத்திய விசாரணையில் அந்த பணம் திரு நெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந் திரனுக்குச் சொந்தமானது என்பது தெரியவந்தது.
இதுகுறித்து போலீசார் வழக் குப்பதிவு செய்து விசாரணை மேற் கொண்டு வரும் நிலையில், பாஜக வேட்பாளர் நயினாருக்கு சொந்த மான வீடு, நண்பர்கள் வீடு, ஹோட் டல் உள்ளிட்ட இடங்களில் தேர்தல் அதிகாரிகள், வருமான வரித்துறை யினர் சோதனை மேற்கொண்டு ரூ. 2 லட்சம் பணம், வேஷ்டி, புல் பாட்டில், டின் பீர் உள்ளிட்டவற்றை கைப்பற்றினர்.
தொடர்ந்து இந்த விவகாரம் தொடர்பாக ஏப்ரல் 14 அன்று பாஜக மாநில தொழில்துறைப் பிரிவு துணைத்தலைவர் கோவர்தனன் உட்பட 4 பேருக்கு தாம்பரம் பெரு நகர காவல்துறை சம்மன் அனுப்பி யது. தற்போது இந்த வழக்கு சிபி சிஐடி காவல்துறையிடம் ஒப்ப டைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த வழக்கு குறித்து பாஜக மாநில பொருளா ளர் சேகர், பாஜக நிர்வாகி முரளி ஆகியோரிடம் விசாரணை நடத்த சிபிசிஐடி போலீசார் முடிவு செய் துள்ளனர். ஓரிரு நாட்களில் இந்த சம்மன் அனுப்பப்பட வாய்ப்பு உள் ளது எனவும் தகவல் வெளியாகி யுள்ளது.
முன்னதாக, பாஜக பொருளா தார பிரிவு தலைவர் கோவர்த்தன் வீடு கடைகளில் சோதனை நடத்தப் பட்டது. மேலும், நயினார் நாகேந்தி ரனின் ஹோட்டல் ஊழியர் சதீஷ், அவரது சகோதரர் நவீன், ஸ்ரீவை குண்டத்தைச் சேர்ந்த ஓட்டுநர் பெரு மாள், நயினார் நாகேந்திரனின் நெருங்கிய உறவினர் முருகன், முருகனின் பணியாளர்கள் ஜெய் சங்கர் ஆசைத்தம்பி ஆகியோரி டம் சென்னை சிபிசிஐடி அலுவலகத் தில் விசாரணை நடத்தி முடிக்கப் பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத் தக்கது.