tamilnadu

img

ரூ.4 கோடி பறிமுதல் விவகாரம் பாஜக நிர்வாகியிடம் விரைவில் விசாரணை

சென்னை, மே 5- மக்களவைத் தேர்தலை யொட்டி கடந்த ஏப்ரல் 26  அன்று தாம்பரம் ரயில் நிலை யத்தில் 4 கோடி ரூபாய் பறி முதல் செய்யப்பட்டது.

நெல்லை பாஜக வேட்பா ளர் நயினார் நாகேந்திர னுக்கு சொந்தமானது என கூறப்படும் இந்த பணம் தொடர்பான வழக்கை சிபி சிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். பாஜக நெல்லை வேட்பா ளர் நயினார் நாகேந்திரனின் ஹோட்டல் ஊழியர் நவீன் அவரது சகோதரர் சதீஷ், ஸ்ரீவைகுண்டத்தைச் சேர்ந்த  ஓட்டுநர் பெருமாள், நயினார்  நாகேந்திரனின் உறவினர் முருகன், முருகனிடம் பணி யாற்றும் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோரிடம் சென்னை எழும்பூர் சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணை நடத்தப்பட்டது.

பணம் கை மாறிய இடங்க ளில் பாஜக நிர்வாகி கோவர்த்  தனின் ஹோட்டலும் ஒன்று  என கூறப்படுகிறது. கோவர்த்  தன் தற்போது உடல் நலக் குறைவால் நீலாங்கரையில் உள்ள தனது வீட்டிலேயே படுத்த படுக்கையாக கிடக்கிறார். விசாரணைக்கு அவரால்  முழு ஒத்துழைப்பு கொடுக்க முடியுமா? என்பதை அறி வதற்காக கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சிபி சிஐடி போலீசார் நீலாங்கரை  பகுதியில் உள்ள அவரது வீட்டில் அவரை சந்தித்தனர்.  அதைத்தொடர்ந்து, சட்ட விதிமுறைகளை பின்பற்றி ஓரிரு தினங்களில் அவர் வீட்  டுக்கே சென்று விசாரணை நடத்துவோம் என சிபிசிஐடி  போலீசார் தெரிவித்துள்ள னர்.