tamilnadu

img

ஆன்லைன் வேலைவாய்ப்பு மோசடிகைளில் 30 வழக்குகள் பதிவு!

ஆன்லைன் வேலைவாய்ப்பு மோசடி தொடர்பாக 6 மாதங்களில் 30 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சைபர் கிரைம் போலீஸ் தெரிவித்துள்ளது.

வாட்ஸ் ஆப், டெலிகிராம், பேஸ்புக்கில் பெறும் சலுகைகள் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என போலீஸ் தெரிவித்துள்ளது.

வேலைவாய்ப்பின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்த அதிகாரப்பூர்வ இணையதளம், தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ள சைபர் கிரைம் அறிவுறுத்தியுள்ளனர்.

மேலும் மோசடிக்கு ஆளாகியிருந்தால் உதவி எண் 1930-ஐ தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என சைபர் கிரைம் போலீஸார் கூறியுள்ளனர்.