tamilnadu

img

3 அரசு கல்வியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்குத் தடை

சென்னை:
தமிழ்நாட்டில் உள்ள 3 அரசு கல்வியியல் கல்லூரிகளில் நடப்புக் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை நடத்தத் தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம் தடை விதித்துள்ளது.நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் உள்ள அரசு கல்வியியல் கல்லூரி, புதுக்கோட்டை அரசு கல்வியியல் கல்லூரி, சென்னை வெலிங்டன் சீமாட்டி கல்வியியல் கல்லூரி ஆகியவற்றில் நடப்புக் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கையை நிறுத்தி வைத்துத் தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம் உத்தரவிட்டுள்ளது.
இந்தக் கல்லூரிகளில் போதிய அளவில் பேராசிரியர்களும், கட்டமைப்பு வசதிகளும் இல்லாததாகக் கூறி அது குறித்து 90 நாட்களுக்குள் விளக்கம் அளிக்க உத்தரவிட்டுள்ளது. 90 நாட்களுக்குள் உரிய விளக்கம் அளிக்காவிட்டால், அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

;