tamilnadu

புதிதாக 3 சட்டக்கல்லூரிகள்: முதலமைச்சர் அறிவிப்பு

சென்னை,ஜூலை 10- தமிழகத்தில் புதிதாக மூன்று அரசு சட்டக் கல்லூரி கள் துவங்கப்படும் என்று முதலமைச்சர் அறிவித்தார். தமிழக சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் மூன்று  அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி,“பொருளாதாரம் மற்றும் சமூகத்தில் பின்தங்கிய குடும்பங்களைச் சார்ந்த மாணவர்களுக்கு குறைந்த செலவில் சட்டக் கல்வி வழங்கிட புதிதாக மூன்று அரசு சட்டக் கல்லூரிகள் தொடங்கப்படும்” என்றார். சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் தற்போது இயங்கி வரும் பல்வேறு சார் நீதிமன்றங்களுக்கு கூடுதல்  இடம் அளிப்பதற்காக ரூ. 202.40 கோடியில் ஒரு அடுக்கு மாடிக் கட்டடம் கட்டப்படும் என்றும் முதலமைச்சர் கூறினார்.
சாலைகள் மேம்பாட்டிற்கு ரூ.1,200 கோடி
தமிழக ஊரக சாலைகள் மேம்பாட்டு திட்டத்துக்கு நடப்பாண்டிலும் ரூ. 1,200 கோடி ஒதுக்கீடு செய்யப்ப டும். இதன் மூலம், 5,000 கி.மீ. நீளமுள்ள ஊரகச் சாலை கள் மேம்படுத்தப்படும். கஜா புயலினால் பாதிக்கப்பட்ட நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, கொடைக்  கானல் கோட்டத்திற்குட்பட்ட சேதமடைந்த சாலைகள் மற்றும் பாலங்களில் மறுசீரமைப்புப் பணிகள் ரூ. 200  கோடியே 53 லட்சம் மேற்கொள்ளப்படும்.ஊரகப் பகுதி களில், குடியிருப்புகளின் சமையலறை மற்றும் குளிய லறைகளிலிருந்து வெளியேறும் கழிவு நீர் தேங்காமல் தடுத்திட, 2 லட்சத்து 500 சமுதாய உறிஞ்சுக் குழி கள், 183 கோடியே 38 லட்சம் ரூபாய் செலவில் நடப்பாண்  டில் அமைக்கப்படும் என்றும் முதல்வர் கூறினார்.