tamilnadu

img

3 புதிய குற்றவியல் சட்டங்களை நிறுத்தி வைக்க வேண்டும்!

சென்னை, ஜூன் 18- இந்திய அரசியலமைப்பின் 348-ஆவது பிரிவை மீறும் வகையில் இந்தியத் தண்டனை சட்டங்களுக்குப் பதிலாக, ஒன்றிய பாஜக அரசு உரு வாக்கியுள்ள மூன்று புதிய சட்டங் களை மறுபரிசீலனை செய்யவும் அவற்றை நிறுத்தி வைக்கவும் ஒன்றிய உள்துறை அமைச்சரை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்

இதுகுறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எழுதி யிருக்கும் கடிதம் வருமாறு:-

சிக்கலும் - ஆட்சேபனையும்!

தற்போதுள்ள இந்திய தண்டனைச் சட்டம் 1860, குற்றவியல் நடைமுறைச் சட்டம் 1973 ஆகியவற்றை ரத்து செய்து  ஒன்றிய பாஜக அரசு இயற்றிய மூன்று  புதிய குற்றவியல் சட்டங்களை அமல் படுத்துவதில் மாநிலம் எதிர்கொள்ளும் பிரச்சனைகளும், சில  ஆட்சேபனைகள் மற்றும் சிக்கல்களை உங்கள் கவனத்திற்குக் கொண்டு வர விரும்புகிறேன். 

பாஜக அரசின் அவசரக்கோலம்!

இந்திய ஆதாரச் சட்டம் 1872, வருகிற ஜூலை 1 ஆம் தேதி முதல் நடை முறைக்கு வர வாய்ப்புள்ளது. இந்த மூன்று சட்டங்களின் மாற்றீடு போதிய ஆலோசனைகள் மற்றும் ஆலோசனை களின்றி அவசரமாகச் செய்யப் பட்டுள்ளது. இந்தச் சட்டங்கள் இந்திய அரசியலமைப்பின் கூட்டுப் பட்டியல் 3-க்குள் அடங்கும்.

எனவே, மாநில அரசுடன் விரிவான ஆலோசனை நடத்தப்பட்டிருக்க வேண்டும். மாநிலங்களுக்கு தங்கள் கருத்துக்களை தெரிவிக்க போதிய அவகாசம் வழங்கப்படாததால், எதிர்க்கட்சிகள் பங்கேற்காமல் புதிய சட்டங்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டன.

பாரதிய நியாயா சன்ஹிதா (பிஎன்எஸ்), 2023; பாரதிய நாக்ரிக் சுரக்ஷா சன்ஹிதா (பிஎன்எஸ்எஸ்), 2023; பாரதிய சாக்ஷ்யா ஆதினி யம் (பிஎஸ்ஏ), 2023 ஆகிய மூன்று சட்டங்களும் சமஸ்கிருதத்தில் பெய ரிடப்பட்டுள்ளன. இது இந்திய அர சியலமைப்பின் 348-ஆவது பிரிவை தெளிவாக மீறுகிறது. நாடாளு மன்றத்தில் நிறைவேற்றப்படும் அனைத்து சட்டங்களும் ஆங்கிலத்தில் இருப்பது கட்டாயமாகும். கூடுதலாக, இந்தச் சட்டங்களில் சில அடிப்படைப் பிழைகள் உள்ளன. 

உதாரணமாக, பாரதியவின் பிரிவு  103 நியாயா சன்ஹிதா (பிஎன்எஸ்)க்கு  இரண்டு வெவ்வேறு வகை கொலை களுக்கு இரண்டு உட்பிரிவுகள் உள்ளன ஆனால் அவை இரண்டும் ஒரே தண்டனையை கொண்டுள்ளது. விஎன்எஸ்-இல் இன்னும் சில விதிகள் உள்ளன, அவை தெளிவற்ற அல்லது சுயமுரண்பாடானவை.

மேலும், இந்த புதிய சட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு கல்வி நிறு வனங்களின் கலந்துரையாடல் மற்றும் Law College மாணவர்களுக்கான பாடத் திட்டம் திருத்துவதற்கு போதுமான நேரம் தேவைப்படும். பங்குதாரர் துறை களுக்கான திறன் மேம்பாடு மற்றும் பிற தொழில் நுட்பத் தேவைகள் அதாவது,  நீதித்துறை, காவல்துறை, சிறைச் சாலைகள், வழக்கு விசாரணை மற்றும் தடயவியல் ஆகியவற்றிற்கு போது மான ஆதாரங்கள் நேரமும் தேவை. அவசரமாகச் செய்ய முடியாத தொடர் புடைய துறைகளுடன் கலந்தா லோசித்து, புதிய விதிகளை உருவாக்கு வது, தற்போது உள்ள படிவங்கள் மற்றும் செயல்பாட்டு நடைமுறைகள் திருத்துவதும் கட்டாயமாகும்.

மேற்கூறியவற்றின் அடிப்படை யில், அனைத்து மாநிலங்கள் மற்றும் பிற முக்கிய அமைப்புகளின் கருத்து களைக் கவனத்தில் கொண்டு புதிய சட்டங்களை மறுபரிசீலனை செய்து,  ஏற்கனவே அறிவிக்கப்பட்ட மேற் கூறிய சட்டங்களை நிறுத்தி வைக்கு மாறு ஒன்றிய அரசைக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்திருக்கிறார்.


 

;