tamilnadu

3 அமைச்சர்கள் வெளிநாடு பயணம்

 சென்னை,செப்.5- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற் கொண்டு வருகிறார். அவருடன் அமைச்சர்  கள் விஜயபாஸ்கர், எம்.சி.சம்பத், ஆர்.பி. உதயகுமார் ஆகியோரும் சென்றுள்ளனர். இந்த நிலையில் வனத்துறை அமைச்  சர் திண்டுக்கல் சீனிவாசன் இந்தோனே ஷியாவுக்கும், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில் ரஷியாவுக்கும், செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ மொரிசியஸ் நாட்டுக்கும், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் பின்  லாந்து நாட்டுக்கும் அரசு முறை பயண மாக சென்று வந்துள்ளனர். இவர்களைத் தொடர்ந்து, சட்டத்துறை  அமைச்சர் சி.வி.சண்முகம், உயர் கல்வித்  துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் ஆகிய  இருவரும் சிங்கப்பூர் புறப்பட்டுச் சென்ற னர். சி.வி.சண்முகத்தின் அண்ணன் மகன் சமீபத்தில் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்  தார். அவர் சிங்கப்பூரில் சிகிச்சை பெற்று வரு வதால் அவரை பார்ப்பதற்காக தனிப்பட்ட  பயணமாக சி.வி.சண்முகம் சென்றுள்ளார். தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்  டியராஜன் துபாய் வழியாக எகிப்து நாட்டுக்கு சென்றுள்ளார். இவர் தனிப்  பட்ட பயணமாக குடும்பத்துடன் சென்றுள்ள தாக அதிகாரிகள் தெரிவித்தனர்.