tamilnadu

img

நியாயமான தொகுதி மறுசீரமைப்பு - அடுத்த கூட்டம் ஹைதராபாத்தில் நடைபெறுகிறது!

தொகுதி மறுசீரமைப்பு கூட்டு நடவடிக்கைக் குழுவின் அடுத்த கூட்டம் ஹைதராபாத்தில் நடைபெறும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

சென்னையில் இன்று தொகுதி மறுசீரமைப்பு தோடர்பான கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. அக்கூட்டத்தில் பேசிய தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, "நமது மாநிலங்கள் சிறப்பாக செயல்பட்டதற்கான தண்டனைதான் தொகுதி மறுவரையறை. இதற்காக கட்சி வேறுபாடுகளை களைந்து போராடுவோம். பாஜக நம்மை பேசவே அனுமதிப்பதில்லை; அவர்கள் நினைப்பதை முடிவாக எடுக்கிறார்கள். தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக எங்கள் மாநில சட்டப்பேரவையில் விரைவில் தீர்மானம் நிறைவேற்றுவேன்”என தெரிவித்தார்.

மேலும், அடுத்த கூட்டத்தை ஹைதராபாத்தில் நடத்த ரேவந்த் ரெட்டி விருப்பம் தெரிவித்ததன்பேரில், தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான கூட்டு நடவடிக்கைக் குழுவின் அடுத்தக் கூட்டம் ஹைதராபாத்தில் நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறினார்.