tamilnadu

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

சென்னை -பெங்களூரு இரண்டடுக்கு ரயிலில் 2ம் வகுப்பு பெட்டிகள்
சென்னை,ஜன.8- சென்னை - பெங்களூரு இடையே இயக்கப்படும் இந்த இரண்டு அடுக்கு ரயிலில், ஐந்து பெட்டிகள் இணைக்கப்பட இருப்பதாகவும், இதற்கு கட்டணமாக ரூ.150 நிர்ணயிக் கப்பட்ட இருப்பதாகவும் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. சென்னை - பெங்களூரு இரண்ட டுக்கு ரயில் பிப்ரவரி 15ஆம் தேதி முதல் இரண்டாம் வகுப்பு பெட்டிகள் இணைக்கப்பட இருக்கின்றன.

அதனுடன், ஏசி வசதி கொண்ட இரண்டு அடுக்கு ரயில் பெட்டிகளின் எண்ணிக்கை பத்தில் இருந்து எட்டாக குறைக்கப்படுகின்றன. அதிவிரைவு ரயில் இது, சென்னை யிலிருந்து பெங்களூருவுக்கு இந்த  ரயில் 5.45 மணி நேரத்தில் சென்றடை யும். இதே வழித்தடத்தில் இரண்டாம் வகுப்பு விரைவு ரயில்கள் இந்த வழித்தடத்தில் 6.10 மணி நேரத்தில் சென்றடையும்.

இதேபோல், கோவை - பெங்களூரு இடையே இயக்கப்படும் உதய் ரயிலி லும், ஏழு ஏசி இரண்டடுக்கு ரயில் இருக்கை வசதி கொண்ட ரயில் பெட்டி கள் எட்டாக உயர்த்தப்பட்டு, ஐந்து இரண்டாம் வகுப்பு முன்பதிவு பெட்டி கள் இணைக்கப்பட இருக்கின்றன.

ஆம்னி பேருந்துகளில் கட்டணம் உயர்வு: பயணிகள் அதிருப்தி
சென்னை,ஜன.8- பொங்கல் பண்டிகைக்கான சிறப்பு  பேருந்துகள் வருகிற 11 ஆம் தேதி முதல்  இயக்க திட்டமிடப்பட்டிருந்தது.  12, 13, 14 ஆகிய நாட்களில் சொந்த  ஊர்களுக்கு பயணம் செய்வோர் அதிகளவில் இருப்பதால் 3 நாட்களும் சென்னையில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். வழக்கமாக 8 ஆயிரத்திற்கும் மேலான சிறப்பு பேருந்துகள் இயக்கப் படும். சொந்த ஊர் செல்ல அரசு, ஆம்னி  பேருந்துகளில் 1 லட்சத்திற்கும் மேற்பட் டவர்கள் முன்பதிவு செய்துள்ளனர். பொங்கல் பயணத்திற்கு இன்னும் 4 நாட்களே இருக்கின்ற நிலையில் அரசு  பேருந்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் அறிவித்துள்ளனர்.

இதனால்  ஆம்னி பேருந்துகளில் 3 மடங்கு கட்ட ணத்தை உயர்த்தி விட்டனர். சென்னை யிலிருந்து கோவைக்கு ஏ.சி. படுக்கை வசதிக்கு ரூ.5 ஆயிரம் கட்ட ணம் கேட்டதாக பயணி ஒருவர் தெரி வித்துள்ளார். மதுரை, திருநெல்வேலி மற்றும் தென் மாவட்டங்களுக்கு வருகிற  12 ஆம் தேதி பயணம் செய்ய ரூ.4 ஆயி ரம் வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட் டுள்ளது.  

இது விமான கட்டணத்தை விட  அதிகமாக உள்ளது என பயணி கள் அதிருப்தி தெரிவிக்கின்றனர்.

தொடர் மழை: அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு

சென்னை,ஜன.8- தொடர் மழை காரணமாக சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வு கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. தேர்வு  நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப் படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு வங்கக் கடல், தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவு கிறது.

இதன் காரணமாக தென்தமிழ் நாடு, வட தமிழ்நாட்டில் உள் மாவட்டங்க ளில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இந்த நிலையில், தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

தொடர் கனமழை காரணமாக சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழக இணைப்பு கல்லூரிகளில் நடை பெற இருந்த அனைத்து தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. தேர்வு நடை பெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தங்கம் விலை ரூ.160 குறைந்தது
சென்னை,ஜன.8- தங்கத்தின் விலை உயர்வதும், மறுநாள் கொஞ்சம் குறைவதுமாக உள்ளது. இந்நிலையில், சென்னை யில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை திங்களன்று (ஜன.8) சவரனுக்கு  ரூ.160 குறைந்து ரூ.46,640-க்கு விற்பனை யானது. ஒரு கிராம் தங்கம் ரூ.5,830-க்கு  விற்பனை செய்யப்பட்டது. மேலும் வெள்ளி ஒரு கிராம் ரூ.77.80 -க்கும், ஒரு  கிலோ ரூ.77,800 க்கும் விற்பனை செய்த னர்.