tamilnadu

img

ஆதம்பாக்கத்தில் பறக்கும் படை சோதனையில் 270 வாக்காளர் அடையாள அட்டை சிக்கியது!

சென்னையில் உள்ள ஆதம்பாக்கத்தில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் 270 வாக்காளர் அடையாள அட்டை சிக்கி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னையில் உள்ள ஆதம்பாக்கத்தில், மக்களவை தேர்தலையொட்டி சுரேந்தர் நகர் மேடவாக்கம் மெயின் ரோட்டில் நேற்று இரவு தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியே வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை செய்தபோது ஏராளமான வாக்காளர் அடையாள அட்டைகள் இருந்தன.

இதையடுத்து அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மொத்தம் 270 வாக்காளர் அடையாள அட்டைகள் இருந்தது. இது தொடர்பாக வாகனத்தில் இருந்த 7 பேரை அதிகாரிகள் பிடித்து ஆதம்பாக்கம் போலீசில் ஒப்படைத்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில் பறிமுதல் செய்யப்பட்ட வாக்காளர் அட்டை அனைத்தும் அதே பகுதியைச் சேர்ந்தவர்களுடையது என்பது தெரிய வந்துள்ளது.

இதனை அடுத்து, மொத்தமாக வாக்காளர் அட்டை கிடைத்தது எப்படி? எங்கு கொண்டு செல்லப்படுகிறது. இதன் பின்னணியில் உள்ளவர்கள் யார்-யார்? என்று பிடிபட்ட 7 பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


;