வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தென்தமிழகம், வட தமிழகத்தின் உள்மாவட்டங்களில் திங்கள்கிழமை முதல் ஏழு நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
சீர்காழியில் அதி கனமழை
அதன்படி, தமிழ்நாட்டின் நாகப் பட்டினம், இராணிப்பேட்டை, மயி லாடுதுறை, விழுப்புரம், கடலூர், திருவாரூர், செங்கல்பட்டு, வேலூர், திருவண்ணாமலை, அரியலூர், கள்ளக்குறிச்சி உள்பட பல்வேறு மாவட்டங்களில் இடைவிடாமல் மழை பெய்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச மாக சீர்காழியில் 24 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.
அணைக்காரஞ் சத்திரம் (கொள்ளிடம்)-19.44, வேளாங்கண்ணி-21.6 திருவாரூர் (வட்டாட்சியர் அலுவலகம்), 21.2, குடவாசல்-13.44, நாகப்பட்டினம் மாவட்டம் திருப்பூண்டி-14.36 செ.மீ., மழைப்பதிவாகியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் சம்பா பயிர்கள் மழைநீரில் மூழ்கி சேதம டைந்துள்ளன.
மயிலாடுதுறை, தரங்கம்பாடி, செம்பனார்கோவில் , சீர்காழி, குத்தாலம், கொள்ளிடம் உட்பட மயி லாடுதுறை மாவட்டம் முழுவதும் 1 லட்சத்து 20 ஆயிரம் ஏக்கரில் சம்பா தாளடி சாகுபடி செய்யப்பட்டி ருந்த நிலையில் தொடர் மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த 25,000 ஏக்கருக்கு மேல் சம்பா பருவ நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதம் அடைந்தன. குறிப்பாக சீர்காழியில் தெருக்களில் நான்கு அடிக்கு தண்ணீர் ஓடுவதாகவும் நெற்பயிர்கள் மூழ்கியுள்ளதால் விவசாயிகள் துயரத்தில் ஆழ்ந் துள்ளனர்.
மாவட்ட நிர்வாகம் உடனடி யாக பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்து பாதிக்கப்பட்ட நெற்பயிர் களுக்கு உரிய நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நேர டிக் நெல்கொள்முதல் நிலையங் களை விரைவாகத் திறக்க நட வடிக்கை எடுக்க வேண்டுமென தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மயிலாடுதுறை மாவட்டச் செயலா ளர் எஸ்.துரைராஜ் வலியுறுத்தி யுள்ளார். மயிலாடுதுறை அருகேயுள்ள ஆனந்ததாண்டவபுரம், நீடூர், மங் கைநல்லூர், பெரம்பூர், கொடை விளாகம், திருவிளையாட்டம், மேமாத்தூர்,எடுத்துக்கட்டி, காழி யப்பநல்லூர், ஆக்கூர், கீழையூர், கஞ்சாநகரம், மணக்குடி, காள கஸ்திநாதபுரம் உள்ளிட்ட பகுதி களில் பெரும்பாலான வயல்களில் மழைநீர் சூழ்ந்துள்ளது.
தாழ்வான குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளது. குத்தாலம் ஒன்றியம், கொடை விளாகம், முத்தூர் உள்ளிட்ட பகுதி களில் பாதிக்கப்பட்டு வயலில் சாய்ந்து கிடக்கும் நெற்பயிர்களை பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம்.முருகன் நேரில் பார் வையிட்டு பாதிப்பு குறித்து விவ சாயிகளிடம் கேட்டறிந்தார் என நமது செய்தியாளர் தெரிவித்துள் ளார்.
கும்பகோணம் அருகே வில்லி யவரம்பல், செம்பியவரம்பல் தண் டம்தோட்டம் மற்றும் திருவிடைமரு தூர், திருப்பனந்தாள் பந்த நல் லூர் பகுதிகளில் சுமார் 2,000 ஏக்கர் சம்பா பருவ நெற்பயிர் கள் தண்ணீரில் மூழ்கி சேதம் அடைந்துள்ளதாக தமிழ்நாடு விவசாயிகள் சங்க தஞ்சாவூர் மாவட்டச் செயலாளர் என்.வி. கண்ணன் நமது செய்தியாளரிடம் திங்களன்று தெரிவித்துள்ளார். பள்ளிகளுக்கு விடுமுறை மழை காரணமாக மயிலாடு துறை, நாகப்பட்டினம், திருவா ரூர், மாவட்டங்களுக்கு ஜனவரி 8-ஆம் தேதி விடுமுறை விடப்பட் டது.
சுவர் இடிந்து சிறுமி பலி
நன்னிலத்தை அடுத்துள்ள அதம்பார் ஒத்தவீடு பகுதியைச் சேர்ந்தவர் ராஜசேகரன். தொடர் மழையால் இவரது வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது. இதில் அவரது மகள் மோனிஷா (9) காயமடைந்து திருவாரூர் அரசு மருத்துவக்கல் லூரி மருத்துவமனையில் அனும திக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும் ராஜசேக ரன் மகன் மோகன்தாஸ் மற்றும் கீழக்குடி கிராமத்தில் சந்திரசேகரன் ஆகியோர் சுவர் இடிந்து விழுந்த தில் காயமடைந்தனர்.