tamilnadu

வாக்குப் பதிவு இயந்திரங்களுக்கு 4 அடுக்கு பாதுகாப்பு

சென்னை, ஏப்.20- தமிழ்நாட்டில் 39 மக்களவைத் தொகுதி களிலும் அமைதியான முறையில் தேர்தல்  நடந்து முடிந்து உள்ளது. சிறுசிறு அசம்பா வித சம்பவங்கள் தவிர்த்து, பெரிய அள வில் வன்முறை சம்பவங்கள், மோதல்கள் இல்லாத தேர்தலாக அமைந்தது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்  குப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவடைந் தது.

அதன்பிறகு, ஒரு சில இடங்களில் வரி சையில் நின்றவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு, 6 மணிக்கு மேலும் வாக்குப்  பதிவுக்கு அனுமதிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் பூட்டி சீல் வைக்கப்பட்டன. 39 தொகுதிகளில் பதி வான வாக்குகள் மின்னணு இயந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களுக்கு வாகனங்களில் எடுத்துச் செல்லப்பட்டன.  இந்தப் பணிகள் இரவு முழுவதும் விடிய  விடிய நடைபெற்றது.

சனிக்கிழமை காலை யிலும் பல இடங்களில் இந்த பணிகள்  நீடித்தன. வாக்கு எண்ணும் மையங்களில்  சேர்க்கப்பட்ட மின்னணு இயந்திரங்கள் ‘ஸ்டிராங் ரூம்’ என்று அழைக்கப்படும் அறை களில் வரிசையாக அடுக்கி வைக்கப்பட் டன. பின்னர் அந்த அறைகள் பூட்டி சீல்  வைக்கப்பட்டன. இந்த அறையன் முன்பு துப்  பாக்கி ஏந்திய துணை ராணுவப் படை யினர் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டனர். ‘ஸ்டிராங் ரூம்’ அறையைச் சுற்றிலும் போலீசார் ரோந்து சுற்றி வரும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதைத் தாண்டி மின்னணு இயந்திரங்கள் வைக் கப்பட்டுள்ள அறைக்கு அருகில் யாரும் நெருங்க முடியாது என்று போலீஸ் அதிகாரி கள் தெரிவித்துள்ளனர். சென்னையில் அண்ணா பல்கலைக் கழகம், ராணி மேரி கல்லூரி, லயோலா கல்லூரி ஆகிய 3 மையங்களில் வாக்குகள்  எண்ணப்படுகின்றன. அதே போன்று 39  தொகுதிகளில் பதிவான வாக்குகள் அந் தந்த தொகுதிக்கு உட்பட்ட மையங்களில் எண்ணப்படுகின்றன. தேர்தல் முடிந்து 45 நாட்கள் கழித்தே  ஜூன் 4 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படு வதால் மின்னணு வாக்குப்பதிவு இயந்தி ரங்களை ஒரு மாதத்துக்கும் மேலாக பாது காக்க வேண்டிய கட்டாயம் காவல்துறை யினருக்கு ஏற்பட்டுள்ளது.  

இதைத் தொடர்ந்து வாக்கு எண்ணும் மையங்களில் 4 அடுக்கு பாதுகாப்பு போடப்  பட்டுள்ளது. முதல் அடுக்கில் துணை ராணு வத்தினர் துப்பாக்கி ஏந்திய படி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இரண்டாவதாக தமிழ்நாடு சிறப்பு போலீஸ் படையினர், 3-ஆவதாக ஆயுதப்படை போலீசார், 4-ஆவதாக உள்ளூர் போலீசார் பாது காப்புப் பணிகளை கவனித்து வருகின்றனர். டி.எஸ்.பி. அல்லது காவல்துறை ஆய் வாளர் பதவிகளில் உள்ள அதிகாரிகள் தலைமையில் உள்ளூர் போலீசார் பாது காப்பு ஏற்பாடுகளை கவனித்து வருகிறார்கள்.

வாக்கு எண்ணும் மையங்கள் அனைத்திலும் நூற்றுக்கணக்கான கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப் பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வரு கிறது. இந்த கேமராக்களில் பதிவாகும் காட்சிகளை 24 மணி நேரமும் கண்கா ணிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள் ளன. இதற்காக வாக்கு எண்ணும் மையங்க ளில் சிறப்புக் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. அங்கிருந்தபடியே போலீசார் கண்காணித்து வருகின்றனர். வாக்கு எண்ணும் மையங்களில் உச்சக்கட்ட போலீஸ் பாதுகாப்பு போடப்  பட்டு 10 ஆயிரம் போலீசார் கண்காணித்து வருகின்றனர். மேலும், வாக்கு எண் ணிக்கை நடைபெறும் நாளில் இந்த பாதுகாப்பை மேலும் பல மடங்கு அதி கரிக்கும் என்றும் காவல்துறை வட்டா ரங்கள் தெரிவிக்கின்றன.