tamilnadu

ஜோலார்பேட்டையிலிருந்து சென்னைக்கு 24 கோடி லிட்டர் தண்ணீர்

வேலூர், ஆக. 6- ஜோலார்பேட்டையிலிருந்து சென்னைக்கு, 24 நாட்களில்  இதுவரை 24 கோடி லிட்டர் தண்ணீர் கொண்டு செல்லப் பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். சென்னையின் குடிநீர் தேவையை சமாளிக்க வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையிலிருந்து ரயில்கள் மூலம் சென்னைக்கு குடிநீர் கொண்டு செல்ல தமிழக அரசு திட்ட மிட்டது. அதன்படி கடந்த மாதம் 12ஆம் தேதி முதல் 50 வேகன்களில் தினமும் ரயில்களில் சென்னைக்கு குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது. இதுகுறித்து, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதி காரிகள் கூறுகையில், தற்போது ஜோலார்பேட்டையிலிருந்து தினமும் இரண்டு ரயில்கள் மூலம்சென்னைக்கு 4 முறை குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது. இதுவரை, 24 நாட்க ளில் 24 கோடி லிட்டர் குடிநீர் சென்னைக்கு ரயில்கள் மூலம்  அனுப்பப்பட்டுள்ளது என்றனர்.