tamilnadu

img

நம் கல்வி திட்டம்: ரூ.21.80 லட்சம் நிதியுதவி

விழுப்புரம்,டிச,25- விழுப்புரம் அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பள்ளிக் கல்வித்துறை சார்பில் நடந்த கலைத் திரு விழாவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ், கேடயங்கள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு விழுப்பு ரம் மாவட்ட ஆட்சியர் மோகன் தலைமை தாங்கினார். விழாவில் அமைச்சர் க.பொன்முடி கலந்து கொண்டு பரிசுகளை வழங்கி சிறப்பு ரையாற்றினார். அப்போது, “ நம் பள்ளி திட்டத்திற்கு ரூபாய் 4 லட்சம் வழங்கு வதாக கூறினார்.  அதனைத்தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் த.மோகன் ரூ. 1 லட்சமும், சட்டமன்ற உறுப்பினர்கள் நா.புகழேந்தி ரூ.3 லட்சம்,  இரா.லட்சுமணன் ரூ. 2 லட்சம், மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் ம. ஜெயச்சந்திரன் ரூ.2 லட்சம், முன்னாள் நகர்மன்றத் தலைவர் ஜனகராஜ் ரூ.2 லட்சம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் புஷ்பராஜ் ரூ.1.5 லட்சமும், விழுப்புரம் நகர்மன்ற தலைவர் தமிழ்ச்செல்வி ரூ.1 லட்சம், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கோ.கிருஷ்ணப்பிரியா ரூ.70 ஆயிரம் என்று மொத்தம் ரூபாய் 21 லட்சத்தி 80 ஆயிரம் வழங்கினர்.