சென்னை, பிப். 12 - 2024 மக்களவைத் தொகுதி பங்கீடு குறித்து, திமுக பேச்சுவார்த்தைக் குழுவுடன் திங்களன்று (பிப்.12) கூட்டணிக்கட்சிகள் பேச்சுவார்த்தை நடத்தின. திமுக பொருளாளர் டி.ஆர். பாலு, துணைப் பொதுச்செயலாளர்கள் ஐ. பெரியசாமி, க. பொன்முடி, ஆ. ராசா எம்.பி., கொள்கை பரப்புச் செயலாளர் திருச்சி சிவா எம்.பி., உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பி னர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் உள்ளிட்டோரைக் கொண்ட குழு கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சு வார்த்தை நடத்திவருகிறது.
இந்தக்குழுவுடன் அறி வாலயத்தில் விசிக தலைவர் தொல். திருமாவளவன், பொதுச் செயலாளர்கள் து.ரவிக்குமார், சிந்தனைச் செல்வன் மற்றும் பனையூர் பாபு எம்எல்ஏ ஆகியோர் கொண்ட குழு பேச்சு வார்த்தை நடத்தியது.
அதன்பின் செய்தியாளர் களிடம் பேசிய தொல். திரு மாவளவன், 3 தனித் தொகுதி, ஒரு பொதுத் தொகுதியை கோரியுள் ளோம். சிதம்பரம், விழுப் புரம், காஞ்சிபுரம், திரு வள்ளூர் ஆகிய 4 தனித் தொகுதிகளில் 3 தொகுதி யும், பெரம்பலூர், மயிலா டுதுறை, கள்ளக்குறிச்சி ஆகிய பொதுத்தொகுதி களில் ஏதேனும் ஒன்றையும் ஒதுக்க கோரியுள்ளோம்.
அடுத்தகட்ட பேச்சு வார்த்தையில் இறுதி முடிவு எடுக்கப்படும் என்றார். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொகைதீன், பொதுச் செய லாளர் அபுபக்கர், அப்துல் பாசித், ஷாஜகான் உள்ளிட் டோர் பேச்சுவார்த்தை நடத்தி னர்.
அதன்பின்னர் செய்தியா ளர்களிடம் பேசிய காதர் மொகைதீன், “இராமநாத புரம் தொகுதியையே மீண் டும் ஒதுக்குமாறு கேட்டுள் ளோம்” என்றார். கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் தலைவர் ஈஸ்வரன் பேச்சுவார்த்தை க்கு பின் செய்தியாளர்களி டம் பேசுகையில், “பேச்சு வார்த்தை சுமூகமாக நடை பெற்றது மகிழ்ச்சி அளிக் கிறது” என்றார்.