பாஜகவுடன் கூட்டணி குறித்து பேசியுள்ள அன்புமணி ராமதாஸ், “மோடியின் நல்லாட்சி தொடரவே பாஜகவுடன் பாமக கூட்டணி” என்று கூட்டணி அமைத் தது குறித்து விளக்கம் கொடுத்துள்ளார்.
ஜீரோ மதிப்பெண் கூட தரமுடியாத மிக மோசமான ஆட்சி!
ஆனால், “அவரது அப்பா மருத்து வர் ராமதாஸ், கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலின் போது தனியார் தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், கடந்த ஐந்தாண்டு கால ஒன்றிய பாஜக ஆட் சிக்கு மதிப்பெண் போட வேண்டும் என்றால், சைபருக்கும் கீழே ஒன்றும் இல்லை. அப்படி அதுக்கும் கீழே இருந் தால் அந்த மதிப்பெண் தான் கொடுப் பேன். அவ்வளவு மோசமான ஆட்சி” என்றார்.
200 விழுக்காடு பாஜகவோடு கூட்டணி இல்லை
“மோடி தனது ஆட்சியில் தமிழ் நாட்டு மக்களுக்கு மட்டுமல்ல இந்திய மக்களுக்கும் எதுவும் செய்யவில்லை. அவங்க சாதித்தது என்ன? என்று கேட்டால் ஒன்றும் இல்லை. அனைத்து மாநிலங்களின் அதிகாரங்களையும் தங்களது கையில் எடுத்துக் கொண் டார்கள். மேலும் எடுத்துக் கொண்டே வருகிறார்கள். பாஜகவின் நோக்கம், இந்தி புகுத்துவது தான். அதாவது ‘இந்துத்துவா’ கொள்கை. இதுதான் அவர்கள் கூறும் இந்தியா. அதாவது இந்து இந்தி இந்தியா பாஜகவின் கொள்கை வேற என்ன அவர்கள் சாதித்து இருக்கிறார்கள்?
ஜீரோவுக்கும் கீழே மதிப்பெண் தேடிக் கொண்டிருப்பதால் நான் அவங்க கூட எப்படி கூட்டணி வைக்க முடியும். நூற்றுக்கு 200 விழுக்காடு பாஜகவுடன் கூட்டணி கிடையவே கிடையாது” என்றும் ராமதாஸ் கூறினார்.
இப்படி சொன்ன ராமதாஸ் தான், அதிமுகவுடன் இணைந்து அதே 2019 தேர்தலில் பாஜக கூட்டணியில் களம் இறங்கினார். அந்தத் தேர்தலில் ஏழு தொகுதிகளில் போட்டியிட்ட பாமகவுக்கு தமிழ்நாட்டு மக்கள் படு தோல்வியையே பரிசாக கொடுத்தனர். அவர்களோடு கூட்டணி சேர்ந்து ஐந்து தொகுதிகள் போட்டியிட்ட பாஜக-வும் மண்ணைக் கவ்வியது.
பாமக ஆடிய கண்ணாமூச்சி!
இந்த முறை பாஜகவை அதிமுக கழற்றி விட்டதால், யாருடன் கூட்டணி என்பதில் கண்ணாமூச்சி காட்டி வந்தது பாமக. ஆனால், லைகா நிறு வனத்தின் தலைமை அதிகாரிகளில் ஒருவரான பாமகவின் கவுரவத் தலை வரும் சட்டமன்றக் குழு தலைவருமான ஜி.கே.மணியின் மகன் தமிழ்க்கும ரனை அமலாக்கத் துறையின் வளை யத்திற்குள் கொண்டுவரும் நடவடிக்கை களை பாஜக மேற்கொண்டதாக கூறப்படுகிறது.
வழக்குகளைத் தூசுதட்டிய பாஜக
அதேபோல், மத்தியப் பிரதேசம், உத் தரப்பிரதேசம் மாநிலங்களில் உள்ள இரண்டு தனியார் மருத்துவக் கல்லூரி களுக்கு அனுமதி வழங்கியதில் சலுகை வழங்கப்பட்டதாகக் கூறப்படும் குற்றச் சாட்டில், ஒன்றிய முன்னாள் சுகாதா ரத் துறை அமைச்சரான அன்புமணி ராமதாஸ் மீது நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை யும் பாஜக தூசி தட்டி எடுத்ததாக கூறப்படு கிறது. பாஜகவின் இந்த அதிரடி மிரட்டல் நடவடிக்கைகள் காரணமாகவே இர வோடு இரவாக பாஜக கூட்டணியில் பாமக ஐக்கியமானதாக கூறப்படுகிறது. இதையொட்டி, கூட்டணி பேரம் முடிவுக்கு வந்ததை, “கண்ணடிச்சா வராதவன் கட்டையால் அடிச்சதால் வந்து விட்டான்” என்றெல்லாம் சமூகவலைதளங்களில் தற்போது மீம்ஸ்கள் பறக்கின்றன.