tamilnadu

img

பள்ளி மாணவர்களுக்கு 2 ஜோடி சீருடைகள்

சமூக நலத்துறையின் மூலம் தையல் கூட்டுறவு அமைப்பில் உள்ள பெண்கள் பள்ளிகளுக்கு நேரடியாக சென்று ஒவ்வொரு குழந்தைக்கும் அளவெடுத்து, தைத்து, பின்னர் நேரடியாக வழங்குகின்றனர். குழந்தைகளுக்கு தரமான சீருடை முறையாக வழங்க வேண்டும் என்பதற்காக கல்வித்துறை, கைத்தறி மற்றும் துணிநூல் துறை மற்றும் சமூக நலத்துறை இணைந்து சீருடைகளை முறையாக வழங்குகிறது. தமிழ்நாடு முழுவதும் அடுத்த வாரத்திற்குள் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு 2 ஜோடி சீருடைகள் வழங்கப்படும் என்று தூத்துக்குடி சாமுவேல்புரம் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் சமூக நலத்துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மகளிர் உரிமைத்துறை-சமூகநலத்துறை அமைச்சர் பி.கீதாஜீவன் கூறினார்.