tamilnadu

img

மீஞ்சூர் அருகே விசவாயு தாக்கி 2 தொழிலாளர்கள் உயிரிழப்பு!

மீஞ்சூர் அருகே விசவாயு தாக்கி 2 தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே அத்திப்பட்டு பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விசவாயு தாக்கி கோவிந்தன் மற்றும் சுப்புராயலு ஆகிய 2 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். தகவல் அறிந்து, சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், தொழிலாளர்களின் சடலங்களை மீட்டு உடற்கூராய்வுக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பள்ளியின் தாளாளரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.