tamilnadu

விமானநிலையத்தில் 2 கிலோ தங்கம் பறிமுதல்  

சென்னை, மார்ச் 4- துபாயிலிருந்து செவ்வாயன்று (மார்ச் 3) காலை சென்னை வந்த ஜெனிதா (40) பயணியை வெளி வாயிலில் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.  அப்போது, அவரது உள்ளாடை மற்றும் பேண்டில்  நான்கு பாக்கெட்டு களில் இருந்து 525 கிராம் தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும், கச்சா தங்கத்தால் செய்யப்பட்ட இரண்டு பிரேஸ்லெட்டுகள், இரண்டு வளையல்கள், ஒரு சங்கிலி ஆகியவையும் பறிமுதல் செய்யப்ப ட்டன. இவற்றின் எடை 279 கிராம் ஆகும். மொத்தம் 803 கிராம். இதன் மதிப்பி ரூ.34. 97 லட்சம் ஆகும். இதனைத் தொடர்ந் ஜெனிதாவை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். இதேபோல், கொழும்பிலிருந்து வந்த இலங்கையைச் சேர்ந்த முகமது அகீல்(23), முகமது அர்ஷத்(28), முகமது அப்சல்(26) ஆகிய 3 பேரிடமிருந்து  1.292 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு  ரூ.56.21 லட்சமாகும்.  இந்த நான்கு பேரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மொத்த மதிப்பு ரூ.91.18 லட்சமாகும். மொத்த எடை 2.095 கிலோவாகும்.

;