tamilnadu

மின்சாரம் பாய்ந்து 2 பெண் யானைகள் உயிரிழப்பு

ஓசூர்,நவ.27- கர்நாடக மாநிலம் பன்னார்கட்டா வன உயிரியல் பூங்காவில் இருந்து 50-க்கும் மேற்பட்ட யானைகள் சில தினங்களுக்கு முன்னர் கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் வனச்சரகத்துக்கு இடம் பெயர்ந்தன.

இந்த யானைகள் இரு குழுக்க
இந்த யானைகள் இரு குழுக்களாக பிரிந்து தேன்கனிக்கோட்டை அருகே உள்ள நொகனூர் மற்றும் சானமாவு காப்புக் காட்டில் சுற்றி வந்தன. இந்நிலையில், நொகனூர் காப்புக் காட்டில் இருந்த 10 யானைகள் தாவரக்கரை பகுதிக்கு இடம்பெயர்ந்து, அங்குள்ள விளை நிலத்தில் புகுந்தன.
அப்போது, அப்பகுதியில் உள்ள கோழி பண்ணை அருகே ஆழ்துளைக் கிணற்றுக்கு உரிய பாதுகாப்பின்றி அமைக்கப்பட்டிருந்த மின் வயரை 8 வயது பெண் யானை கடித்ததில், மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தது. தகவ லறிந்து சென்ற வனத்துறையினர் யானையின் உடலை மீட்டு, விசாரணை நடத்தி வருகின்றனர்

ஈரோடு மாவட்டம் சத்திய மங்கலம் புலிகள் காப்பகத்தில் 10 வனச்சரகங்கள் உள்ளன. இவற்றின் அருகே உள்ள விவசாய நிலங்களில் யானைகள், காட்டுப்பன்றிகள் புகுந்து, பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகள், விலங்குகள் வருவதை தடுக்க, விளை நிலங்களைச் சுற்றிலும் பேட்டரியில் இயங்கும் மின் வேலி அமைத்துள்ளனர்.

இந்நிலையில் தாளவாடி அருகே யுள்ள இக்காலூரைச் சேர்ந்த மகா தேவசாமி என்பவரது தோட்டத்தில் பெண் யானை மின்வேலியில் சிக்கி உயிரிழந்து கிடந்தது. தகவலறிந்து வந்த வனத்துறையினர் யானையின் உடலை மீட்டு, விசாரணை நடத்தி னர். உயிரிழந்த யானையின் உடல் பிரேத பரிசோதனைக்கு பின்னர், அடக்கம் செய்யப்பட்டது.