tamilnadu

img

கல்லூரி நிர்வாகத்திற்கு 2 நாள் அவகாசம்

சிதம்பரம், ஆக. 14- திருவள்ளுவர் பல்கலைக்கழக தேர்வு முடிவுகளில் குளறுபடி களை களைந்திட கோரி சிதம்பரம் அருகே உள்ள சி.முட்லூர் அரசு  கலைக் கல்லூரி மாணவர்கள் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்திய மாணவர் சங்கத்தின் தலைமையில் கடந்த 2 மாதங்களாக கல்லூரி வளாக த்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகிறார்கள். மேலும் தங்கள் கோரிக்கைகள் குறித்து கல்லூரி நிர்வாகத்திடம் மனு கொடுத் தனர்.  ஆனால்,கல்லூரி மற்றும் பல்கலை க்கழக நிர்வாகங்கள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், திங்க ளன்று (ஆக.14) வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி வாயில் முன்பு சிதம்பரம் - கடலூர் புறவழி சாலையில் மாணவர்கள் மறியல் செய்தனர். இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலத் தலைவர் அரவிந்த்சாமி பங்கேற்று கோரிக்கைகளை வலி யுறுத்தி பேசினார். சங்கத்தின் மாவட்ட துணைச் செயலாளர் லெனின் சௌமியா உள்ளிட்ட மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பிறகு, கல்லூரி நிர்வாகம் 2 நாள் அவகாசம் கேட்டால் போராட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைத்த னர்.