tamilnadu

தமிழகத்தில் 2 சட்டமன்ற தொகுதிகள் காலியாக உள்ளதாக அறிவிப்பு

சென்னை, மார்ச் 2- தமிழகத்தில் 2 சட்டமன்ற தொகுதிகள் காலியாக உள்ளதாக  அறிவிக்கப்பட்டுள்ளது. திருவொற்றியூர் திமுக  எம்எல்ஏ கே.பி.பி.சாமி கடந்த 27 ஆம் தேதியும், குடியாத்தம் திமுக எம்எல்ஏ  காத்தவராயன், கடந்த 28ஆம் தேதியும்  உடல்நலக் குறைவால் கால மாகினர்.  இந்த 2 தொகுதிகளும் காலி யாக இருப்பதாக, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹுவுக்கு சட்டமன்ற செயலாளர் தெரிவித்தார். இதையடுத்து துணைத் தேர்தல் ஆணையத்துக்கு சத்யபிரதா சாஹூ எழுதியுள்ள கடிதத்தில், திருவெற்றியூர், குடி யாத்தம் ஆகிய 2 தொகுதிகள் காலியாக உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். தேர்தல் ஆணைய விதிப்படி, சட்டமன்ற உறுப்பி னர் மறைந்த பின்னர் அந்த தொகுதி காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்ட தேதி யில் இருந்து 6மாதத்திற்குள் இடைத்தேர்தல் நடத்தி முடிக்க வேண்டும்.

;