tamilnadu

img

சென்னை அரசு காப்பகத்தில் 19 குழந்தைகள் உட்பட 22 பேருக்கு கோவிட்-19 பாதிப்பு

சென்னை தண்டையார்பேட்டையில் உள்ள அரசு குழந்தைகள் காப்பகத்தில், 19 குழந்தைகள் உட்பட 22 பேருக்கு கோவிட்-19 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னை தண்டையார்பேட்டை கடற்கரை சாலையில் உள்ள அரசு குழந்தைகள் காப்பகத்தில் 81 குழந்தைகள் உள்ளனர். 12 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். 18 வயதுக்கு உட்பட்ட ஆதரவற்ற குழந்தைகள் அங்கு வசித்து வருகின்றனர். இந்த நிலையில், காப்பகத்தின் பாதுகாவலருக்கு வைரஸ் அறிகுறிகள் தென்பட்டதால், அவருக்கு கோவிட்-19 பரிசோதனை செய்தபோது, தொற்று இருந்தது உறுதியானது. இதை தொடர்ந்து, கடந்த ஜூன் 2-ஆம் காப்பகத்தில் உள்ள குழந்தைகள் மற்றும் ஊழியர்களுக்கு கோவிட்-19 பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த பரிசோதனை முடிவில், 19 குழந்தைகள் உட்பட 22 பேருக்கு கோவிட்-19 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.