tamilnadu

இலங்கை விடுதலை செய்த 19 மீனவர்கள் சென்னை வந்தனர்

இராமேசுவரத்தில் இருந்து 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் சுமார் 2 ஆயி ரத்திற்கும் அதிகமான மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்குச் சென்றனர். வழக்கம் போல் மீனவர்கள் நடுக்கடலில் மீன் பிடித்துக்  கொண்டிருந்தனர்.

அப்போது 2 ரோந்துக் கப்பல்களில் வந்த  இலங்கை கடற்படையினர், இராமேஸ்வ ரத்தைச் சேர்ந்த 2 விசைப்படகுகள் மற்றும்  அதிலிருந்த 13 மீனவர்களை எல்லை தாண்டி  மீன் பிடித்ததாகக் கூறி படகுகளுடன் சிறைப்  பிடித்துச் சென்றனர். இதே போல் புதுக்  கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு படகு  மற்றும் 6 மீனவர்களையும் சிறைப்பிடித்த னர்.

இலங்கை கடற்படையின் இந்த அத்து மீறிய நடவடிக்கைக்கு மீனவ அமைப்புகள்  கடும் கண்டனம் தெரிவித்தனர். மீனவர் களை விடுவிக்க நடவடிக்கை கோரி வெளி யுறவுத் துறை அமைச்சருக்கு முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார்.

இதையடுத்து, இந்திய - இலங்கை தூத ரக அதிகாரிகளின் பேச்சுவார்த்தையை அடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு 19 மீனவர்களும் விடுதலை செய்யப்பட்டனர். இந்நிலையில், அவர்கள் 19 பேரும் சென்னை  வந்தனர். விமான நிலையத்தில் மீனவர் களை அதிகாரிகள் வரவேற்று, அரசு வாக னங்களில் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர்.