tamilnadu

img

தமிழகத்தில் ரூ.18.13 கோடி அபராதம் வசூல்

சென்னை:
தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவை மீறி வாகனங்களில் வெளியே சுற்றிய 8,60,110 பேர் கைதாகி ஜாமீனில் விடுவிக்கப் பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இந்த உத்தரவை மீறி தேவை இல்லாமல் வாகனங்களில் ஊர் சுற்றுபவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, கைது நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். அவர்கள் சென்ற வாகனங்கள் பறிமுதல் செய்யப் படுகிறது.தமிழகம் முழுவதும், 8 லட்சத்து 60 ஆயிரத்து 110 பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப் பட்டுள்ளனர். மேலும் 7 லட் சத்து 83 ஆயிரத்து 614 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள் ளது. 6 லட்சத்து 37 ஆயிரத்து 469 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுவரை 18கோடியே 13 லட் சத்து 89 ஆயிரத்து 771 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

;