தமிழக மீனவர்கள் 16 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், ஒன்றிய அரசின் நடவடிக்கை போதுமானதாக இல்லை என சு.வெங்கடேசன் எம்பி குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து சு.வெங்கடேசன் எம்பி அளித்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
எனது 21.02.2023 கடிதத்திற்கு வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் 28.02.2023 தேதியிட்ட பதில். இலங்கை அரசின் உயர்மட்டத்தில் இந்திய அரசின் கவலையும் வன்முறை ஏற்க இயலாது என தெரிவிக்கப்பட்டுள்ளது;தூதரகம் தகவல்களை சேகரிக்கிறது. அரசு மீனவர் பாதுகாப்பிற்கான எல்லா முயற்சிகளையும் எடுக்கும் என்று அந்த பதிலில் தெரிவித்துள்ளார். நன்றி.
ஆனால் இக்கடிதம் வருவதற்குள்ளாக 16 தமிழ் மீனவர்கள் (நாகப்பட்டினம் 12, புதுக்கோட்டை 4) பேர் கைது என்ற செய்தி. இன்னும் ஒன்றிய அரசின் குரலும் கருத்தும், நடவடிக்கையும் அழுத்தமானதாக இல்லை என்பதையே நிகழ்வுகள் காட்டுகிறது.
ஒன்றிய அரசின் கண்துடைப்பு நடவடிக்கையை இலங்கை கடற்படை வாரந்தோறும் நிருப்பிக்கிறது என அதில் தெரிவித்துள்ளார்.