tamilnadu

img

பி.ஆர்.சி.ஐ.-யின் 14-ஆவது சர்வதேச மாநாடு

சென்னையைச் சேர்ந்த மக்கள் தொடர்பு நிறுவனமான கேட்டலிஸ்ட் பப்ளிக் ரிலேஷன்ஸிற்கு பப்ளிக் ரிலேஷன்ஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா அமைப்பு இரண்டு அகில இந்திய அளவிலான விருதுகளை வழங்கியுள்ளது. பெங்களூருவில்  நடைபெற்ற பி.ஆர்.சி.ஐ.-யின் 14-ஆவது சர்வதேச மாநாட்டில், பெங்களூரு பல்கலைக்கழக துணைவேந்தர் வேணுகோபால் மற்றும்  காவல் துறை ஆணையர் பாஸ்கர் ராவ் ஆகியோர் வழங்கினார். இரு விருதுகளையும் கேட்டலிஸ்ட் பி.ஆர். நிறுவனத்தின் நிறுவனர் இராம்குமார் சிங்காரம் பெற்றுக்கொண்டார்.