புதுச்சேரியில் 12 பேருக்கு கொரோனா பாதிப்பு!
புதுச்சேரி, மே 20- புதுச்சேரியில் தற்போது 12 பேர் கொரோனா சிகிச்சை பிரிவில் தங்க வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுவதாக புதுச்சேரி சுகாதாரத்துறை துணை இயக்குநர் ரவிச்சந்திரன் தெரிவித்தார். புதுச்சேரியில் உள்ள கொரோனா சூழல் தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “புதுச்சேரியில் கொரோனா பரி சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்புகளுடன் ஓரிருவர் சிகிச்சைக்கு சில நாட்களாக வந்து வீட்டுக்கு அனுப்பப்பட்டனர். கடந்த வாரம் முதல், புற நோயாளி களுக்கு டெங்கு, சிக்குன்குனியா, கொரோனா பரிசோதனைகள் நடத்தப்படு கின்றன. அதன்படி 20 பேர் கொரோனா அறிகுறிகளுடன் சிகிச்சைக்கு அனு மதிக்கப்பட்டனர். இதில் 8 பேர் ஆரம்ப சிகிச்சையிலேயே குணமடைந்து வீட்டுக்குச் சென்றுவிட்டார். 12 பேர் தற்போது தனி வார்டில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பு அறிவுரைகள் ஏதும் ஒன்றிய அரசிடமிருந்து வரவில்லை . காய்ச்சல், சளி எனில் அச்சப்பட தேவையில்லை. உரிய சிகிச்சை பெற்றால் உடனே சரியாகிவிடும். அத்துடன் கைகளை நன்றாக சோப்பு போட்டு கழுவிட வேண்டும். சளி உள்ளவர்கள் இருமும் போது துணியால் மூடிக் கொள்ள வேண்டும். கொரோனா அறிகுறி இருந்தால் முகக்கவசம் அணியவேண்டும்”என்று குறிப்பிட்டார்.
பொறியியல் கல்லூரிகளில் சேருவதற்கு 2 லட்சம் மாணவர்கள் விண்ணப்பம்
சென்னை, மே 20- தமிழ்நாட்டில் பொறியியல் சேர்க்கைக்கான இணையதள விண்ணப்பப் பதிவு, கடந்த மே 7 ஆம் தேதி துவங்கியது. மே 19 ஆம் தேதி வரை 1,99,669 மாணவர்கள் விண்ணப்பித்துள்ள னர். அவர்களில், 1,30,238 மாண வர்கள் உரிய கட்டணத்தை செலுத்தி உள்ளனர்; 86,846 மாணவர்கள் சான்றி தழ்களை பதிவேற்றி உள்ளனர். பொறியியல் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாண வர்கள், www.tneaonline.org என்ற இணையதளத்தில், ஜூன் 6 ஆம் தேதி வரை பதிவு செய்ய லாம். இதில் ஏதேனும் விளக்கம் தேவைப்பட்டால், 1800 -425-0110 என்ற இலவச தொலைபேசி எண்ணிலோ, tneacare@gmail.com என்ற மின்னஞ்சல் முக வரியிலோ தொடர்பு கொள்ளலாம்.
தென்பெண்ணையில் வெள்ளப்பெருக்கு; 3 மாவட்டங்களுக்கு அபாய எச்சரிக்கை!
கிருஷ்ணகிரி, மே 20- தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்ட த்தில், கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. கிருஷ்ண கிரி மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகள் மெல்ல நிரம்பி வருகின்றன. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பாயும் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கெலவரப்பள்ளி அணை, கிருஷ்ணகிரி அணை நிரம்பி வருகின்றன. அணை களின் பாதுகாப்பு கருதி முன்னெச்சரிக்கையாக அணைக்கு வரும் நீர் முழுவதும் திறந்து விடப்படுகின்றன. அதன்படி, கிருஷ்ணகிரி அணையின் நீர்வரத்து 4,208 கன அடியாக இருந்தது. நீர்வரத்து முழுவதும், மதகுகள் வழியாக வெளி யேற்றப்படுகிறது. இதனால், தென்பெண்ணை ஆற்றங்கரையோர மக்கள், ஆற்றில் இறங்க, குளிக்க வேண்டாம் எனவும் கிருஷ்ணகிரி அணையில் இருந்து சாத்தனூர் அணை வரையில் தென்பெண்ணை ஆற்றின் கரையோரத்தில் தாழ்வான பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்க ளுக்கு செல்லுமாறு கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் ச. தினேஷ்குமார் அறிவுறுத்தியுள்ளார். தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு காரணமாக கிருஷ்ண கிரி, தருமபுரி, திருவண்ணா மலை மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.