tamilnadu

புற்றுநோய் பரிசோதனை திட்டம் தொடக்கம்: 12 பேருக்கு பாதிப்பு உறுதி

சென்னை, ஜன.31- தமிழ்நாட்டில் 18 வயதுக்கு மேற்பட்ட ஆண், பெண் ஆகிய இருவருக்கும் புற்றுநோய் பரி சோதனை செய்து கொள்ளும் திட்டத்தை, பொது சுகாதாரத் துறை சமீபத்தில் செயல்படுத்தி யுள்ளது.

முதல்கட்டமாக, ஈரோடு, ராணிப் பேட்டை, கன்னியாகுமரி, திருப் பத்தூர் ஆகிய மாவட்டங்களில் இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

இத்திட்டம் தொடங்கப்பட்ட 15 நாட்களில் 12 பேருக்கு புற்று நோய் பாதிப்பு இருப்பது  கண்டறியப்பட்டுள்ளது. இது தொடர்பாக பொது சுகாதா ரத்துறை அதிகாரிகள் கூறியதா வது:-

நாட்டில் அதிகரித்து வரும் புற்று நோய் பாதிப்பை கட்டுப்படுத்த வீடு, வீடாக பரிசோதனை திட்டம்  தொடங்கப்பட்டுள்ளது. 15 நாட்க ளாக பரிசோதனைகள் நடைபெற்று வருகின்றன. இதுவரை 12 பேருக்கு புதிதாக பாதிப்பு கண்டறியப்பட்டு, அவர்களுக்கு அதற்கான சிகிச்சை யும் அளிக்கப்படுகிறது.

52 லட்சம் பேருக்கு பரிசோ தனை செய்ய இலக்கு நிர்ணயிக் கப்பட்டுள்ளது. ஆரம்ப நிலையி லேயே பாதிப்பை கண்டறிந்தால் நோயை குணப்படுத்த முடியும். நோயின் தீவிரத்தால் ஏற்படும் உயிரி ழப்பை தடுக்கலாம்” என்றனர்.