tamilnadu

img

9 மற்றும் 10ம் வகுப்போடு படிப்பை நிறுத்துவோர் எண்ணிக்கை 100 சதவிகிதம் அதிகரிப்பு

கடந்த 3 ஆண்டுகளில் 9 மற்றும் 10ம் வகுப்போடு படிப்பை நிறுத்தும் தமிழக மாணவர்களின் எண்ணிக்கை 100 சதவிகிதம் அதிகரித்துள்ளது என்ற அதிர்ச்சித்தகவல்கள் வெளியாகி உள்ளது. 
பள்ளிப்படிப்பின் இறுதிக் கட்டமான 9 மற்றும் 10 ஆம் வகுப்பில் இருந்து விலகுபவர்கள் எண்ணிக்கை குறித்து  ராஜஸ்தான்  நாடாளுமன்ற உறுப்பினர்  பி பி சவுத்ரி மற்றும் மகாராஷ்டிர  நாடாளுமன்ற உறுப்பினர் கேள்விக்கு மத்திய அமைச்சர் ரமேஷ் போக்ரியால் விடை அளித்தார்.   அந்த பதிலில் கூறப்பட்டுள்ளதாவது  ராஜஸ்தான், மகாராஷ்டிரா, மற்றும் கர்நாடகாவில் பள்ளிப் படிப்பில் கல்வியை நிறுத்துபவர்கள் எண்ணிக்கை குறைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழகத்தில் கடந்த 2015-16 வருடம் 8 சதவிகிதம்  இருந்த மாணவர்கள் எண்ணிக்கை 2017-18 அதாவது மூன்றே வருடங்களில் 16.2 சதவிகிதம் அதிகரித்துள்ளது.   இது 100 சதவிகிதத்திற்க்கும் அதிகமாகும்.   ஐந்தாம் வகுப்பு வரை கல்வியை நிறுத்தும் மாணவர்கள் 5.9 சதவிகிதம் உள்ளனர்.  தமிழகம்  கல்வியில் மிகவும் முன்னேறி  இருந்ததாக கூறப்பட்ட நிலையில் இந்த தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.  இதற்கு வறுமையும் பொருளாதாரமும் முக்கிய காரணம் என அரசு தெரிவித்துள்ளது. அத்துடன் உடல்நலக் குறைவு, உடல் ஊனம், குடும்ப சூழ்நிலையால் பெற்றோர்கள் கல்வி அளிப்பதை நிறுத்துதல்  ஆகியவையும் காரணங்களாக உள்ளன.    இவர்களில் பலர் மீண்டும் வழக்கமான பள்ளிக் கல்விக்குக் கொண்டு வரப்பட்டுள்ளதாக ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.