tamilnadu

100 சதவிகிதம் காப்பாற்றப்படுவார்கள்

ராணிப்பேட்டையில் 9,566 பேருக்கு பரிசோதனை மேற்கொண்டதில், 222 பேருக்கு மார்பக புற்றுநோய் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. 290 பேருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. 29 பேருக்கு வாய் புற்றுநோய் பாதிப்பு உறுதியாகி இருக்கிறது. இந்த 3 வகையான புற்று நோய்களும் தொடக்க நிலையில் இருப்பதால் அதனால் பாதிக்கப்பட்டவர்கள் 100 சதவிகிதம் முழுமையாக காப்பாற்றப்படுவார்கள்” என்று தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் நம்பிக்கை அளித்துள்ளார்.