tamilnadu

img

10 ஆண்டு கால பாஜக ஆட்சி சென்னைக்கு எதுவும் செய்யவில்லை

சென்னை,மார்ச் 13- ஒன்றிய பாஜக அரசு கடந்த பத்தாண்டு காலத்தில் சென்னை யின் வளர்ச்சிக்கு ஒன்றுமே செய்ய வில்லை என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.

சென்னை தங்கசாலையில் வியாழனன்று (மார்ச் 14) நடை பெற்ற வடசென்னை வளர்ச்சித் திட்ட  துவக்கவிழாவில்  ரூ. 4181.03 கோடி மதிப்பீட்டிலான பணிகளை துவக்கி வைத்து அவர் பேசியதாவது: 

அதிமுகவை போன்று தான்  10 ஆண்டுகால பாஜக ஆட்சியில் சென்னைக்கு எதுவும் செய்ய வில்லை. தமிழ்நாட்டிற்கும் ஒன்றும் செய்யவில்லை. ஆனால், பிரதமர் மோடி கன்னியாகுமரி வருகிறார். அவர் எதற்காக வரப் போகிறார்? தமிழ்நாட்டிற்கான சிறப்புத் திட்டங்களை உருவாக்கித் தர வரப் போகிறாறா? இல்லை, ஓட்டு கேட்டு  வரப் போகிறார். சென்னை வெள்ள த்தில் மிதந்த போது, மக்களுக்கு ஆறுதல் கூற வராத பிரதமர், தூத்துக் குடியும், கன்னியாகுமரியும் வெள்ளத்தில் மிதந்த போது மக்களைப் பார்க்க வராத பிரதமர், ஓட்டு கேட்டு மட்டும் வருவதில் நியா யமாக இருக்கிறதா? 

குஜராத் மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட போது, அன்றைய தினமே ஹெலிகாப்டரில் சென்று பார்த்தாரே! மறுநாளே, நிவாரண நிதி கொடுத்தாரே! குஜராத்திற்கு ஏன் கொடுத்தீர்கள் என்று நான் கேட்க வில்லை. தமிழ்நாட்டுக்கு ஏன் தரவில்லை என்று தான் கேட்கி றேன்.

பிரிவினைவாதி யார்?
குஜராத்துக்கு அன்றைய தினமே நிதி தருவதும், தமிழகத்திற்கு மூன்று மாதம் சென்ற பிறகும் நிதி தர மனதில்லாமல் போவதும் ஏன்? இதை கேட்டால், நம்மை பிரிவினை வாதி என்று அடையாளம் காட்டு கிறார்கள். நம்மை பிரிவினைவாதி போல் பேசுகிறார்கள். 

அது மட்டுமா! சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டப் பணி! நாம் ஆட்சிக்கு வந்த உடனே, பிரதமரை நான் முதல் முறையாக பார்க்கச் சென்றபோது, நிதி கேட்டேன்.  3 வருடமாகியும் என்ன நிலைமை? நமக்கு அடுத்து கேட்ட மாநிலங்களுக்கு வழங்குகிறார்கள். ஆனால், நமக்கு ஒன்றும் வர வில்லை! தரவில்லை! 

ஒன்றிய அரசுக்கு அதிக வரி வரு வாய் எங்கிருந்து போகிறது? நம் முடைய தமிழ்நாட்டில் இருந்து போகிறது. நம்முடைய பணம் தான் போகிறது. ஆனால், அதற்கேற்ற மாதிரி திருப்பி தருகிறார்களா? நாம் ஒரு ரூபாய் கொடுத்தால், 28 பைசா தான் மறுபடியும் நமக்கு வருகிறது! அதையாவது ஒழுங்காக கொடுக்கி றார்களா? இல்லை! 

நிதி கேட்டு கடிதம் எழுதுகி றோம்! நம்முடைய எம்.பி.க்கள் எல்லாம், நிதி கொடுங்கள் என்று நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்கி றார்கள். அதற்கு பிறகு தான் அந்த 28 பைசாவையும் கொடுக்கிறார்கள். இதை சொன்னால் நாம் பிரிவினை பேசுகிறோமா. பிரதமர் மோடியே, பிரிவினை எண்ணம் எங்களுக்கு இல்லை. ஒரு கண்ணில் வெண்ணெ ய்யும், மற்றொரு கண்ணில் சுண்ணாம்பும் ஏன் என்று தான் கேட்கிறோம். 

பாலபாடமா?
தேசபக்தியை பற்றி எங்களுக்கு யாரும் போதிக்க வேண்டியது அவசி யம் இல்லை. நாட்டுப்பற்று பற்றி எங்களுக்கு யாரும் வகுப்பு எடுக்க வேண்டிய அவசியமே கிடையாது.  தமிழ்நாட்டை சீரழித்த அதிமுக-வையும், தமிழ்நாட்டை கண்டு கொள்ளாத ஒன்றிய பாஜக-வையும் மக்கள் நிராகரிக்க தயாராகி விட்டார்கள் . அதைத்தான் இந்த கூட்டம் உணர்த்துகிறது. 

நாட்டை காப்போம்!
தமிழ்நாட்டின் வளர்ச்சியின் தொடர்ச்சியாக, இந்தியாவையும் காக்க வேண்டிய பெரும் பொறுப்பு  தமிழ்நாட்டு மக்களான நமக்கு வந்து  சேர்ந்திருக்கிறது. அதற்கு துணை நிற்க, உங்கள் அனைவரையும் அழைக்கிறேன். தமிழ்நாட்டை வளர்ப்போம்! இந்தியாவை காப்போம்!  இவ்வாறு முதலமைச்சர் பேசினார்.